இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு ? மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு!

புதுடெல்லி: குரங்கு அம்மைநோய் பாதிப்பு உள்ள நாட்­டிலிருந்து சமீபத்தில் இந்தியா­வுக்கு வந்த ஒரு­வ­ருக்கு அந்த நோய்க்­கான அறிகுறி
இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்­று க்­கிழமை தெரிவித்துள்­ளது. நோயாளி அங்கீக­ரிக்­கப்­பட்ட மருத்துவ­ம­னை­யில் தனி­மைப்­   படுத்­தப்­பட்டுள்­ளார்.அவரின் உடல்நிலைசீராக இருக்­கிறது. கவலை அடை­யத்தேவை இல்லை” என்­றும் அமைச்­ச­கம்தெரிவித்துள்­ளது .அந்த நபரி­ட­மிருந்து மாதிரிகள் சேகரிக்­கப்­பட்டு, அவ­ருக்கு குரங்கு அம்மை நோய் உள்­ளதா என்­பதைஉறுதி செய்ய சோத­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. இதுகுறித்து சுகா­தார அமைச்­ச­கம்,”ஏற்­க­னவே நிறுவிக்­கப்­பட்ட நெறி­மு­றை­களின் படி, இந்த விவ­காரம் கண்­கா­ணிக்கப்­ப­டுகிறது. நோய் இருப்­ப­தற்­கான சாத்தியக்­கூறுகளை ஆராய்­வ­தற்­கும், நாட்­டில் பாதிப்புகள் ஏற்­ப­டாமல் இருக்­க­வும் அந்த நபரு­டன் தொடர்பு­டைய நபர்­க­ளைக் கண்­ட­றியும் பணிகளும் மேற்­ கொள்­ளப்­ப­டுகின்­றன. தேசிய நோய்க்­கட்­டுப்­பாட்டு மையம்(என்­சிடிசி) முன்­னதாக மேற்­ கொண்ட இடர் மதிப்பீட்­டோடு இந்த புதிய வழக்கின் வளர்ச்சிகள் ஒத்துப்­போகின்­றன. என்­றா­லும் அச்­சப்­பட தேவை இல்லை.இது­போன்ற தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட பய­ணிகள் தொடர்­பான நோய் வழக்­கு­களை கையாள, நாடு முழு அள­வில் தயா­ராக உள்­ளது. சாத்தி­ய­மான ஆபத்துகளை எதிர்­ கொள்­ள­வும் அவற்­றைத் தணிக்­க­வும் நட­வ­டிக்­கை­கள் தயாராக உள்­ளன என தெரிவித்துள்­ளது.