வாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி – நீதிமன்றத்தில் மனு தாக்கல

ரேசன் பொருட்­கள் வாங்­கும் போதும், எரி­ வாயு சிலிண்­டர் பதிவு செய்­யும் போதும், வங்கி
பரிவர்த்­தனை மேற்­ கொள்­ளும்  போதும்  அதனை உறுதிப்­ப­டுத்­த­ வும், வெளிப்­ப­டைத் தன்­மைக்கு பொறுப்­ பேற்கும் வகை­யிலும் உடனடியாக பயனா­ள­ரின் பதிவு செய்­யப்­பட்ட அலை­பே­சிக்கு குறுஞ்­ செய்தி அனுப்­பப்­பட்டு வருகி­றது.

அதே போல் வாக்­கா­ளர்­கள் தங்­க­ளின் வாக்­குப்­ப­திவில் முறை­கே­டுகள் ஏதும் நடை­பெ­றாமல் தடுக்­கும் வகை­யில், ஒருவர் தன் வாக்கை பதிவு செய்­த­வுடன் அதை உறு­திப்­ப­டுத்தும் வகை­யில்,
வாக்­கா­ள­ரின் அலை­ பே­சிக்கு குறுஞ்­செய்தி வரும் (vote confirmationsms)  திட்­டத்தைசெயல்­படுத்த வேண்டும் என தேர்­தல் ஆணையத்தி­டம் கடந்த 2 ஆண்டுக­ளாக கோரிக்கை வைக்­கப்­பட்டு வருகி­றது. மேலும், கள்ள வாக்­குகள் பதிவாவதை தடுக்கும் வகை­யில், குறுஞ்­செய்தி அனுப்­பு­வதை உறுதிப்­ப­டுத்தும் இந்த நடை­முறை குறித்து பரிசீலித்து வரு­வ­தாக முத­லில் கூறிய தேர்­தல் ஆணையம் அதன் பின்­னர் எந்த நடவடிக்­கை­யும் எடுக்­க­ வில்லை.

எனவே, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்றும் கடந்த பிப்­ரவரி மாதம் அளித்த மனுக்­கள் மீது  இந்­திய தேர்­தல் ஆணையமோ அல்­லது தமிழக தலைமை தேர்­தல் அதி­காரியோ எந்த நடவடிக்­கை­யும் எடுக்­கா­த­தால், உரிய நடவடிக்கை எடுப்­ப­தற்கு தேவை­யான தகுந்த உத்­த­ர­வு­களை பிறப்­பிக்க வேண்­டு­மென தமிழ்­நாடு இசை வேளா­ளர்­கள் இளை­ஞர் நலச்சங்­கத்­தின் தலை­வர் கே.ஆர்.குகேஷ் சென்னை உயர்நீதி மன்­றத்தில் தாக்­கல் செய்­துள்ள மனுவில் குறிப்­பிட்டுள­ளார்.

தமிழ்­நாட்டில் சட்­டப்பேரவை வரும் சூழலில்,மனு சென்னை உயர் நீதி மன­றத்தில் தலைமை நீதி­பதி தர்­மா­ திகாரி தலை­மை­யிலான அமர்வில் விரை­வில் விசா­ர­ணைக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­ கி­றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்­ட­மாக வரும் ஏப்­ரல் 23-ந் தேதிவாக்குப்­ பதிவு நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான வேட்புமனு தாக்­கல் நாளை மறுநாள் அதா­வது திங்­கட்கிழமை
(மார்ச் 30) த ொடங்­குகி­றது. மேலும், ஏப்­ரல் 23- ந் தேதி பதிவான வாக்­கு கள் மே 4-ந் தேதி எண்­ணப்­பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்­கப்­ ப­டவுள்­ளன.