சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, இன்று வருவாய் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் திரளாக கலந்துகொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரும்மற்றும் அனைத்து மக்களும் திரளாக வந்து ஆதரவு தர கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்; எடப்பாடி அறிவிப்பு






