கோயம்புத்தூர், ஆக., 27: கோயம்புத்தூர் விமானநிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்டரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துக்கைப்பற்றினர்.கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்துநாட்கள் விமான சேவை வழஙகப்படுகிறது. காலை 3.45 மணியளவில் கோவை வரும் ஷார்ஜா விமானம் மீண்டும் அதிகாலை 4.30 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டுச்செல்லும். அதன்படி நேற்று(ஆக.26) காலை ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணிகள்யாரும் அதற்கு உரிமைகோராததால் இதுகுறித்து தீவிர தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது சுங்கத்துறை தீவிர விசாரணை






