காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் ஆக.24 ஜம்­மு- ­காஷ்மீர் மாநி­லத்­தில் வருகிற செப்­டம்­பர் 18,செப்­டம்­பர் 25 மற்றும் அக்­டோபர்           1- ந்தேதி­க­ளில் மூன்று கட்­ட­மாக சட்­ட­மன்ற தேர்­தல் 90 இடங்­க­ளுக்கு நடைபெற இருக்­கிறது. ஜம்­மு-­காஷ்­மீர் மாநி­லத்­தில் பரூக் அப்­துல்­லா­வின் தேசிய மாநாடு.மெக­பூபா முஃப்­தியின் மக்­கள் ஜன­நாயக கட்சி ஆகிய இரண்டுகட்­சி­களும் முதன்­மை­யான மாநில கட்­சி­யாக உள்­ளன. பா.ஜ.க.- வை வீழ்த்த இந்த மூன்று கட்­சி­க­ளும் இந்தியா கூட்­டணி என்ற அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து தேர்­தலை சந்­திக்குமா? எனத் தெரி­யவில்லை. ஆனால் காங்­கி­ரஸ்கட்­சியும், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யும் சேர்ந்து போட்­டியிட வாய்ப்­புள்­ளது. கூட்­டணி அமைப்பதற்­கான பேச்­சு வார்த்தை நடை பெற்று வரும் 90 தொகு­தி­க­ளில் காங்கி­ரஸ் கட்­சி­யு­டன் கூட்­டணி என தேசிய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் பரூக் அப்துல்லா தெரி­வித்துள்­ளார். இதற்­கான ஒப்­பந்­தம் விரைவில் கையெ­ழுத்­தாகும் என­வும் தெரிவித்­துள்­ளார். நேற்று பரூக்அப்துல்லா தனது மகன் உமல்அப்­துல்லா உடன் காங்­கி­ரஸ் தேசியதலை­வர் மல்­லி­கார்­ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகி­யோரை சந்­தித்து ஆலோசனை நடத்­தி­னார்.பின்­னர் அவர் கூறுகை­யில் “நாங்­கள் ஒரு நல்ல சந்திப்பை, சுமூ­க­மான சூழ­லில் நடத்­தினோம். கூட்­டணி தேர்­தலை நோக்கி சென்று கொண்­டிருக்­கி­றது. கட­வுள் விரும்­பி­னால் அதுசீராக நடைபெ­றும்.கூட்­டணி இறு­தி­யானது.விரை­வில் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தாகும்.90 தொகு­தி­களில் இந்த கூட்­டணி போட்­டியிடும். இவ்­வாறு பரூக் அப்துல்லா தெரி­வித்தார். மேலும் தேர்­தலுக்கு முன் அல்­லது தேர்­த­லுக்கு பின் மெக­பூபாமுஃப்­தியின் மக்­கள் ஜன­நாயக கட்­சி­யு­டன் கூட்டணி என்­பதை அவர் புற­ந்தள்ளி விட­வில்லை. மாநில அந்­தஸ்து எங்­க­ளுக்கு முக்­கி­யமா­னது. இது எங்­களுக்கு வாக்­கு­று­தியாக அளிக்­கப்­பட்­டுள்­ளது. மாநிலம் மோச­மான நாட்­களை பார்த்துள்­ளது. முழு அதிகா­ரத்­து­டன் மீட்­டெடுக்­கப்­ப­டும் என நம்­பு­கி­றோம். நாட்­டில் நில­வும் பிள­வு­ ப­டுத்­தும் சக்தி­களை தோற்­க­டிப்பதற்­காக தேர்­த­லில் போராடுவதே எமது பொது­வான குறிக்­கோள் ஆகும்.இவ்­வாறு பரூக்அப்­துல்லா தெரிவித்­துள்­ளார்.