ஜம்மு காஷ்மீர் ஆக.24 ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வருகிற செப்டம்பர் 18,செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1- ந்தேதிகளில் மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் 90 இடங்களுக்கு நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு.மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய இரண்டுகட்சிகளும் முதன்மையான மாநில கட்சியாக உள்ளன. பா.ஜ.க.- வை வீழ்த்த இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணி என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ்கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது. கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடை பெற்று வரும் 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தெரிவித்துள்ளார். நேற்று பரூக்அப்துல்லா தனது மகன் உமல்அப்துல்லா உடன் காங்கிரஸ் தேசியதலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் கூறுகையில் “நாங்கள் ஒரு நல்ல சந்திப்பை, சுமூகமான சூழலில் நடத்தினோம். கூட்டணி தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடவுள் விரும்பினால் அதுசீராக நடைபெறும்.கூட்டணி இறுதியானது.விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.90 தொகுதிகளில் இந்த கூட்டணி போட்டியிடும். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் மெகபூபாமுஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்பதை அவர் புறந்தள்ளி விடவில்லை. மாநில அந்தஸ்து எங்களுக்கு முக்கியமானது. இது எங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் மோசமான நாட்களை பார்த்துள்ளது. முழு அதிகாரத்துடன் மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம். நாட்டில் நிலவும் பிளவு படுத்தும் சக்திகளை தோற்கடிப்பதற்காக தேர்தலில் போராடுவதே எமது பொதுவான குறிக்கோள் ஆகும்.இவ்வாறு பரூக்அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா






