அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலர் ராதிகா கூறிய தாவது:
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டிக்கக்கூடியது. பெண்கள் இதுபோன்ற புகார்களை வெளியில் சொல்ல தேவையான தைரியத்தை, தர வேண்டியது போலீசாரின் கடமை. எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், அதற்குரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.பெண்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்.பெண்கள், கல்லுாரி மாணவியர், இளம்பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. இதைத்தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.






