கன்னியாகுமரி தனியார் விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் விடுதி உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு

நாகர்­கோ­வில்,ஆகஸ்ட் 22 கன்­னி­யா­கு­மரி தென்தமி­ழ­கத்­தின் முக்­கிய சுற்­று­லாத்­த­ல­மா­கும். கன்­னி­யா­கு­ம­ரிக்கு தினந்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான உள்­ளூர், வெளி­யூர் மற்­றும் வெளி­நா­டு­க­ளில் இருந்து ஏரா­ள­மான சுற்­றுலா பய­ணி­கள் வந்து செல்­வ­தால் இங்கு தனி­யார் தங்­கும் விடு­தி­கள் ஏரா­ளம் உள்­ளது. இந்­நி­லை­யில் குமரிசுற்­றுலாதலத்­தில் தனி­யார் விடு­தி­யில் ஒரே அறை­யில் இரண்டு சிறு­மி­கள் ஒரு சிறு­வன் மற்­றும் ஒரு இளை­ஞன் பாலி­ய­லில் ஈடுப்­பட்­ட­தாக கிடைத்ததக­வ­லின் பேரின் கன்­னி­யா­கு­மரி உதவி ஆய்­வாளர் சுந்­த­ர­மூர்த்தி தலைமை­யி­லான போலி­சா­ரின் அதி­ரடி நட­வ­டிக்­கை­யால் விடுதி உரி­மை­யா­ளர், மேலா­ளார், இளை­ஞர் உட்­பட ஆறு பேர் பிடிப்­பட்­டா ர்கள். இவர்­களை அனைத்து மக­ளீர் காவல் நிலை­யத்­தில் வைத்து தொடர் விசா­ரனை நடத்தி மூன்று பேர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்­யப்­பட்டுள்­ளது. அதன் விவ­ரம் வரு­மாறு :- நேற்று முன்­ தி­னம் நள்­ளி­ரவு 2 சிறு­மி­க­ளு­டன் கன்­னி­யா­கு­மரி வந்த இளை­ஞர்­கள் 2 பேர் கன்­னி­யா­கு­மரிபுதிய பேருந்து நிலை­யம் அருகே உள்ள ஒரு தனி­யார் விடு­தி­யில் அறை எடுத்து தங்­கி­யுள்­ள­னர்,இவர்­கள் தங்­கும் விடு­திக்கு வரு­வதைப் பார்த்தசிலர் காவல் துறைக்கு தக­வல் தெரி­வித்­துள்­ள­னர்.அதன் அடிப்­படை­யில் சந்தே­கத்­தின் பேரில் கன்­னி­யா­கு­மரி காவல் நிலையஉதவி ஆய்­வாளர் மற்­றும்போலீ­சார் அவர்­கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை மேற்­கொண்­டனர் அப்போது, 17 வய­து­டைய இரண்டு சிறு­மி­கள்மற்­றும் 17 வய­து­டைய ஒரு சிறு­வன் மற்­றும் 22 வய­து­டைய ஒரு இளைஞர் ஆகி­யோர் ஒரே அறை­யில் தங்கி இருப்­ப­தும் அவர்­கள் பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­ட­தும் தெரி­ய­வந்­தது. இத­னை­ய­டுத்து அவர்­களை­யும்,விடுதி உரி­மை­யா­ளர் மற்­றும் மேலா­ளர் ஆகி­யோரை கன்­னி­யா­கு­மரிஅனைத்து மக­ளிர் காவல்நிலை­யத்­திற்கு அழைத்துவந்து விசா­ரணை நடத்­தி­னர்.அப்போது சிறு­மி­கள் இரு­வ­ரும் தங்­கள் வீடு­க­ளுக்கு சொல்­லா­மல் இவர்க­ளு­டன் கன்­னி­யா­கு­மரி வந்­தது தெரி­ய­வந்­தது.மேலும், ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்­தவர் சட்­டக் கல்­லூரி மாண­வர் குமார் (22) என்­ப­தும்,4 பேரும் தூத்­துக்­கு­டி­யைச்சேர்ந்­தவர்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இத­னை­ய­டுத்து விடுதி உரி­மை­யா­ளர் பால்­ராஜ் (61), மேலா­ளர் சிவன் (54) மாண­வர்குமார், ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்­டத்­தின் கீழ்வழக்­குப் பதிவு செய்து சிறை­யில் அடைத்­தனர்.இந்த சம்­பவம் கன்­னி­யா­கு­ம­ரி­யில் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது.