உங்கள் போத­னை­களே எனக்கு உத்வேகம் அளிப்பவை’ராஜிவ் காந்தியின் பிறந்தநாளில் ராகுல் காந்தி உருக்கம்!

புது­டெல்லி, ஆக., 21:
“அப்பா, உங்­கள் போத­னை­களே எனக்கு உத்­வேகம் அளிப்­பவை. உங்­கள் நினை­வுகளை என்­னுடன் எடுத்துக்­ கொண்டு இந்­தி­யா­வுக்­கான உங்­கள் கன­வு­களை நிறைவேற்றுவேன்”என்று முன்­னாள் பிரதமர்ராஜிவ் காந்­தியின் பிறந்தநாளை முன்­னிட்டு எதிர்க்­கட்­சித் தலை­வர்ராகுல்காந்தி தெரிவித்துள்­ளார்.

முன்­னாள் பிரதமர்ராஜிவ் காந்­தியின் 80வது பிறந்­த­நாளை காங்­கிரஸ்கட்­சியி­னர் கொண்­டாடி வருகின்­ற­னர். ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவ­ரது நினை­விடமான வீர்பூமிக்குச் சென்ற ராகுல்காந்தி,மலர்­தூவி மரியாதை செலுத்தி­னார். டெல்லி­யில் மழை பெய்து வரும்நிலை­யில் மழை­யில் நனைந்­த­படி அவர் மலர்தூவி பிரார்த்­தனை செய்தார். பின்­னர்,நினை­விடத்தை வலம் வந்தார். அவ­ரோடு, பிரியங்காகாந்­தியின் கண­வர் ராபர்ட்வதேரா உள்ளிட்­டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி­னர்.தனது தந்­தை­யைப் பற்றி தனது எக்ஸ் பக்­கத்தில் பகிர்ந்­துள்ள ராகுல் காந்தி,”அவர் இரக்­க­ முள்ளஆளுமை, நல்லி­ணக்­கம் மற்றும் நல்­லெண்­ணத்­தின் சின்­னம்” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.மேலும், “அப்பா, உங்கள் போத­னை­களே எனக்கு உத்­வே­கம் அளிக்­கக்கூடியவை. உங்­கள் நினை­வுகளை என்­னுடன் எடுத்துக்­கொண்டு இந்­தி­யா­வுக்­கான உங்­கள் கன­வு­களை நிறைவேற்று வேன்”என்று ராகுல் காந்தி தெரி­வித்துள்­ளார். நாடா­ளுமன்ற வளா­கத்­தில் உள்ள ராஜிவ் காந்­தி­யின் புகைப்­ப­டத்துக்கு காங்­கிரஸ் கட்­சியின் நாடாளுமன்ற தலை­வர் சோனியா காந்தி, மாநிலங்களவை தலை­வர் மல்லி­கார்­ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்­தூவி மரியாதை செலுத்தி­னர். ராஜிவ் காந்தியின் பிறந்­த­நாளை முன்னிட்டு காங்­கிரஸ் கட்சி வெளியிட்­டுள்ள எக்ஸ்பதிவில், “தொலை­நோக்­குப் பார்வை கொண்ட தலை­வர், பாரத் ரத்னாராஜிவ் காந்­திக்கு இன்று நாறோம் மரியாதை செலுத்துகி­ம். நவீனதொழில நுட்பத்­தை­யும், பெண்­கள் மற்­றும் இளை­ஞர்­க­ளுக்கு அதிகா­ரமளிக்கும் சகாப்­தத்­தை­யும் தோற்று வித்­தவர் அவர்.மதச்­சார்­ பின்மை, ஒற்­றுமை மற்றும் முற்­போக்­கான இந்­தியா ஆகிய அர­சியல­மைப்பு மதிப்புக­ளுக்­கான அவ­ரது அர்ப்­பணிப்பு ஒரு வளமான மற்றும் அனை­வ­ரை­யும்உள்­ள­டக்கிய தேசத்தை உரு­வாக்கு­வ­தற்­கான நமது அர்ப்­ப­ணிப்பில் தொடர்ந்து நம்மை வழி ­நடத்துகி­றது” என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.”அப்பா, உங்­கள் போத­னை­களே எனக்கு உத்­வேகம் அளிப்­பவை. உங்­கள்நினை­வுகளை என்­னுடன் எடுத்துக்­கொண்டு இந்­தி­யா­வுக்­கான உங்­கள் கன­வு­களை நிறைவேற்றுவேன்”என்று முன்­னாள் பிரதமர்ராஜிவ் காந்­தியின் பிறந்தநாளை முன்­னிட்டு எதிர்க்­கட்­சித் தலை­வர்ராகுல்காந்தி தெரிவித்துள்­ளார்.