தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான அள­வு நிதி ஒதுக்கீடு வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை:“தமி­ழ­கத்­தில் புதிய ரயில்வே வழித்­த­டங்­கள், இரு­வ­ழிப்­பாதை மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கான வச­தி­கள் தொடர்பான திட்­டங்களுக்கு போது­மான அள­வுக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­திட வேண்­டும்,”என்று ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ண­வுக்கு தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

இது­ தொ­டர்­பாக, தமி­ழகமுதல்­வர்மு.க.ஸ்டாலின்,ரயில்வே அமைச்­சர் அஸ்­வினிவைஷ்­ண­வுக்கு இன்று(ஆக.19) எழு­தி­யுள்ள கடி­தத்­தில், “2024 2025 நிதி­யாண்­டில் வழக்­க­மான ரயில்வே பட்ஜெட்டில்,தெற்குரயில்வே  திட்­டங்­களுக்­கான நிதி ஒதுக்­கீடு குறிப்­பி­டத்­தக்க அள­வுக்குக் குறைந்­தி­ருப்­ப­தால்,அதன் விளைவாக தமிழ­கத்­தில் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில் தாக்கம் ஏற்­பட்­டுள்­ளது.தமி­ழ­கத்­தில் புதிய வழித்­தடங்­கள்,இரட்­டைப்பாதை மற்­றும் வாடிக்­கையா­ளர்­க­ளுக்­கான வச­தி­கள் தொடர்­பான திட்­டங்­களுக்­குப் போது­மான அள­வுக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­திடவேண்டும்.

­20242025 நிதி­யாண்­டுக்­கான இந்­திய ரயில்­வேக்­கான வழக்­கமான பட்­ஜெட்­டில், சிலகணக்­குத் தலைப்­பு­க­ளின்கீழ் தெற்கு ரயில்வே திட்டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருப்­பது ஏமாற்­ற­ம­ளிக்­கி­றது. அதே ஆண்­டின் இடைக்­கால பட்­ஜெட்­டில் ஒதுக்­கப்பட்ட ஒதுக்­கீ­டு­க­ளு­டன் ஒப்­பி­டும் ­போது இதுமிகக்குறைவு.கணக்­குத்தலைப்பு 11 புதியபாதைகள் என்­ப­தன் ­கீழ் இடைக்கால ஒதுக்­கீ­டாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டி­ருந்த நிலை­யில், வழக்­கமான பட்­ஜெட் ஒதுக்­கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய் ­தான் ஒதுக்­கப்­பட்டி­ருக்­கி­றது.கணக்­குத்தலைப்பு 15இரட்­டைப்பாதை­யாக்­கல் என்­ப­தன் கீழ் இடைக்­கால ஒதுக்­கீ­டாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், வழக்­கமான பட்­ஜெட் ஒதுக்­கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்­ தான் ஒதுக்­கப்­பட்டி­ருக்­கி­றது.

மேற்­கண்ட நிதி ஒதுக்கீட்­டில், புதிய வழித்­த­டத்திட்­டங்­க­ளுக்­கான ஒதுக்கீட்­டில் ரூ.674.8 கோடி அள­வுக்கு அதி­ர­டிக்குறைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தால்,தமி­ழ­கத்­தில் நடைபெற்று வரும் பல முக்­கி­யத்திட்­டங்­க­ளின் முன்­னேற்­றம் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டும். அந்தவகை­யில், திண்­டி­ வனம் சஞ் ­சி ­திருவண்­ணாமலை, திண்­டி­வனம் ­ந­கரி,அத்­திப­பட்­டு ­புத்­தூர்,ஈரோ­டு ப­ழனி, சென்­னை க­ட­லூர்-­ம­காப­லி­பு­ரம், மது­ரை-­தூத்­துக்­குடி (வழி­ அ­ருப்­புக் கோட்டை) ,ஸ்ரீ­பெரும்­பு­தூர்-­கூ­டு­வாஞ்­சே­ரி ­இ­ருங்­காட்­டுக் கோட்டை- ஆ­வ­டி­ ஸ்ரீ­பெ­ரும்­பு­தூர் ஆகிய ஏழு முக்­கியதிட்­டங்­கள் பாதிக்­கப்ப­டும்.அதேபோல்,இரட்டைப் பாதைத் திட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்டை285.64 கோடி ரூபாய் அள­வுக்­குக் குறைத்­தி­ருப்­பது,தமி­ழ­கத்­தில் மிக­வும் அத்­தி­யாவ­சி­ய­மாக உள்ள இரட்­டைப் பாதை திட்டங்­களைச் செயல்­ப­டுத்­து­வதை நிச்­ச­யம் தாம­தப்­படுத்­தும்.

அந்த வகை­யில்,விழுப்­பு­ரம்­ திண்­டுக்­கல்,திரு­வள்­ளூர்-­அரக்கோணம் (4-வது லேன்), ஓம­லூர்-மேட்­டூர் அணை, திரு­வனந்­த­பு­ரம் ­கன்­னி­யாகு­மரி,மது­ரை- ­மணியாச்­சி ­தூத்­துக்­குடி, மணி­யாச்­சி நா­கர்­கோ­வில், சேலம் மேக்­னசைட் சந்­திப்­பு­ ஓ­ம­லூர்,காட்­பா­டி வி­ழுப்­பு­ரம்,சேலம்­ க­ரூர்-­திண்­டுக்­கல்,ஈரோ­டு ­க­ரூர், சென்னைகடற்­கரை-­சென்னைஎழும்­பூர், அரக்­கோணம் யார்டுசாலை 1 மற்­றும் 2-க்கு, 3வது மற்­றும் 4 வது வழித்­த­டம் இணைப்பு போன்ற திட்­டங்­கள் பாதிக்­கப்ப­டும்.மேலும், சென்னை மற்­றும் அதன் சுற்­றுப்­பு­றப்பகு­தி­கள் தொடர்­பாக தெற்கு ரயில்­வே­யில் நிலு­வை­யில் உள்ள முக்­கிய பிரச்­சி­னை­கள் குறித்து எடுத்­து­ரைக்கவிரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள முதல்­வர்,குறிப்­பாக,கிளாம்­பாக்­கம் பேருந்துநிலை­யம்,மின்­சா­ரப்பேருந்து சேவை­கள்,பெருந்­தி­ரள் துரித ரயில் போக்­கு­வ­ரத்­துத்திட்டத்தை மாநில அர­சி­டம்ஒப்­படைப்­பது போன்றபணி­கள் எவ்­வித தாம­த­மும் இன்றி விரை­வு­படுத்­தப்­பட வேண்­டும்.

மேற்­கூறி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு, தமி­ழ­கத்­தில் புதிய வழித்­த­டங்கள், இரு­வ­ழிப்­பாதை மற்­றும் வாடிக்­கை­யாளர்­க­ளுக்­கான வச­தி­கள் தொடர்பான திட்­டங்­க­ளுக்கு போது­மான அள­வுக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­வதை உறுதிசெய்­திட வேண்­டும்.நிதிப்பற்­றாக்­குறை கார­ணமாக இந்த முக்­கி­யத் திட்டங்­களை மேலும் தாம­தப்ப­டுத்­தக் கூடாது என்­றும் இது தொடர்­பாக ரயில்வே அமைச்­சர்தனிப்­பட்ட முறை­யில் தலை­யிடவேண்­டும்.” என்று முதல்­வர் அந்த கடி­தத்­தில் வலி­யு­றுத்தி உள்­ளார்.