குடியாத்தம்,செப்.30-கரூரில் தவெக தலைவர் விஜய் மேற் கொண்டபிரசாரத்தின் போதுகூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் விஜய்க்கு எதிராக மாணவர் சங்கம் என்றபெயரில் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பங்களார் மேடு பகுதியில் த.வெ.க தலைவர் விஜய்க்குஎதிராக மாணவர் சங்கம என்ற பெயரில் சிலர்சுவரொட்டி ஒட்டினர்.அப்போது தவெக நிர்வாகிகள் அங்குவந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் சுவரொட்டி ஒட்டியவர்களுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.இதனையடுத்து தவெக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.






