திருநெல்வேலி VM சத்திரம் அடுத்து ஆச்சி மடத்தில் மிக மோசமான விபத்து 05/08/2024 நடந்தது நின்று கொண்டிருந்த நபர் மீது ஒரு பெண்மணி தாறுமாறாக கார் ஓட்டிட்டு
கொண்டு வந்து நேராக முட்டி மரத்தின் மீது தூக்கி வீசி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் இறந்த நபர் பெயர் இசக்கிமுத்து
46 வயது இரண்டு பெண்குழந்தைகள் மூத்த பெண் 10/08/2024 அன்று இன்ஜி
னியரிங் கவுன்சிலிங் கலந்து மேற்படிப்பு பயில்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் இரண்டாவது பெண் ஆறாம் வகுப்பு படிக்கிறார்
இவர் சொந்த ஊர் அய்யனார் குளம்
பட்டி குடியிருப்பது பாளையங்கோட்டை மகாராஜா நகரில் இந்த விபத்து குறித்து மேற்படி
வாகனம் ஓட்டி வந்த பெண்மணி 44 வயது என்று தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள் இறந்தவர் இசக்கி முத்தின் உறவினர்கள் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் இறந்தவர் உடலை வைத்து சாலை
மறியல் செய்வோம் என்ற கோரிக்கையை ஏற்று சிசிடிவி ஆதாரத்துடன் வழக்கை விசாரித்த
காவல் துறையினர் விசாரித்து வாகனம் ஓட்டி வந்தவர் குரும்பூரை
சேர்ந்த ரம்யராஜா மகள் சண்முக பிரியா என்றும் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்தப்பெண்மணி
இதற்கு முன்பு ஒரு விபத்து
ஏற்படுத்தி ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த
வழக்கு தற்போது இறுதி
கட்ட விசாரணையில் உள்
ளதாகவும் தகவல் வெளி
யாகி உள்ளது.
திருநெல்வேலி VM சத்திரம் அடுத்து ஆச்சிமடத்தில் மிகே மேமோசமான விபத்து






