தர்மபுரி. ஜூலை.02 தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ,கும்பாரஅள்ளி சோதனை சாவடி வழியாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி மனோகரன் அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில் இன்று விடியற்காலை காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் எஸ்.ஐ.க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான 3 சொகுசு கார்களை போலீசார்தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.ஆனால் வாகனங்கள் நிற்காமல் சென்றன, இதனால் சந்தேகமடைந்தபோலீசார் சொகுசு காரை துரத்தி சென்றனர். போலீசார் துரத்தி கொண்டு வருவதை அறிந்தவர்கள் சொகுசு கார்களை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி சென்றனர். சொகுசு கார்களை பறிமுதல் செய்து சோதனையிட்டபோது100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 3-டன் அளவிற்கு 7 இலட்சம் ரூபாய் மதிப்பி லான தமிழக அரசால் தடைசெய் யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. குட்காவுடன்,சுமார் 15லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை பறி முதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் கடத்திவரப்பட்ட 7 லட்சம் மதிப்பிலான 3- டன் குட்கா பறிமுதல்-! காரிமங்கலம் போலீசார் அதிரடி!!






