கோவை, நவ. 10காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகளை ‘மண்ணுரிமைப் போராளிகள்’ என்று போற்றுபவர்கள் மீது தமிழ் நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை பா.ஜ.க.எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன்
தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில்,ராஜ்குமார் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள அமரன் திரைப்படம் தமிழ் நாட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது .இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப்போரிட்டு நாட்டுக்காக வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ‘ அ ம ர ன் ’ திரைப்படம் வெளியாகி உள்ள அனைத்து இடங்களிலும் குடும்பம் குடும்பமாக இந்த திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். கடந்த அக்டோபர் 3 0- ம் தேதி அமரன் ’திரைப்படத்தைப் பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தியாக வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமாக சென்று சேருவதை யும்,மக்களிடம் தேசபக்தி பொங்கி எழுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள், ’ அமரன் ’ திரைப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளனர். சில அடிப்படைவாத அமைப்பு கள் ‘ அமரன் ’ திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் முயற்சிகளில் ஈடு பட்டு வருகின்றனர். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகவுள்ள, மனிதநேய மக்கள்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ”அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள மிருகங்களால் வேட்டை யாடப்பட்டனர். தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போலதான் காஷ்மீர் மக்கள் தங்க ள்மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள் ”என கூறியிருக்கிறார் . இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது இந்தியாவிடம் உள்ள காஷ்மீரை அபகரிக்க துடிக்கும் பயங்கர வாதிகளையும், இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் பிரிவினை வாதிகளையும் மண்ணுரிமைப் போராளிகள் என்றும், தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள்மண்ணின் உரிமைக்கா க போராடுகிறார்கள் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி எம்.எல்.ஏவாகப் பதவி யேற்றுள்ள ஜவாஹிருல்லா கூறுவதுகடும் கண்டனத் துக்குரியது, தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ள அவரது இந்த கருத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியையும்,சட்டம் ஒழுக்கையும் சீர்குலைக்க சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதை முளையி லேயே கிள்ளி எறிய வேண்டும்.இல்லை யெனில் தமிழ்நாடு வன்முறைக்காடாகி விடும். கோவை கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை மறக்கவேண்டாம் என முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கி றேன். காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவே முடியாத அங்கம். காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பவர்களை, மண்ணுரிமைப் போராளிகள் என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றம். பிரிவினை வாதிகளை, பயங்கரவாதிகளை யார், எந்த வழியில் ஆதரித் தாலும் அவர்கள் மீது தமிழ் நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.‘அமரன் திரைப் படம் வெளியாகி யுள்ள திரையரங்குகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள அடிப்படை வாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்க வேண்டும் தேசத்தின் இறையாண்மையில் எந்தவொரு சமரசத்தையும் தி.மு.க. அரசு செய்யக் கூடாது‘ அ ம ர ன் ’ திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரனுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :- வானதி சீனிவாசன்






