டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு- 2.27 லட்­சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை ஜூன்.16 தமிழ்­நாடு அரசு பணியா­ளர் தேர்­வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில்
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களைநிரப்பு­வ­தற்­கான அறி­விப்பு கடந்த ஏப்­ரல்
1ந்தேதி வெளியிடப்­பட்­டது.இதில், துணைகலெக்­டர் பதவிக்கு28 இடங்­கள்,போலீஸடி. எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிக­வரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்­கள். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்­கள். மாவட்ட வேலை­வாய்ப்பு அதி­காரி பதவிக்கு 3இடங்­கள், தொழி­லாளர் நல உதவி ஆணை­யர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்­கள் அடங்கும். அதோடு உதவிவன பாதுகா­வ­லர் பத­விக்கு 2 காலியிடங்­களுக்­கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியி­டப்­பட்­டது.இந்த தேர்வை எழுத ஏரா­ளமான படட்­த­ரிகள் போட்டி போட்டு விண்­ணப்பித்­த­னர்.
குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்­தம் 2 லட்­சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்­ணப்பித்­த­னர்.குரூப் 1 தேர்வை எழுத 2 லட்­சத்து 27 ஆயிரத்து 982 பேரும்.குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும்
அனுமதிக ்­கப்­பட்­ட­னர்.இந்த நிலை­யில் குரூப் 1 மற்­றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு இன்று நடந்
தது. இதற்­காக தமிழ­கம் முழு­வ­தும் 38மாவட்­டங்­கள் மற்றும் 6 தாலுகாமையங்கள் என 44 தேர்வு
மையங்­கள் அமைக்கப்­பட்டு இருந்­தன.சென்­னை­யில் மட்டும் குரூப் 1 முதல்­ நிலை தேர்வை 41,094 பேர் எழுதி­னார்­கள். இதற்­காக சென்­னை­யில் 170 தேர்வு அறைகள் அமைககப்­பட்டு இருந்­தன.
தரவா­ண ை ய இணையதளத்­தில் இருந்து பதிவி­றக்­கம் செய்­யப்­பட்ட ஹால் டிக்கெட்டை
கொண்டு வந்­த­வர்­கள் மட்­டுமே தேர்வு எழுத அனுமதிக்­கப்­பட்­ட­னர்.மேலும் தேர்வு எழுதவந்­த­வர்­
கள் ஆதார் அட்டை,பாஸ்­போர்ட். டிரைவிங் லைசென்ஸ்,பான்­கார்டு, வாக்­காளர் அடை­யாள
அட்டை ஆகிய­வற்றில் ஏதே­னும் ஒன்­றின் நகலை எடுத்து வந்து காண்பித்து தேர்வு எழுத சென்­ற
னர்.தேர்வு எழுத வந்த மாண­வர்­கள் காலை 8.30 மணி முதல் தேர்வு எழுதும் மையங்­க­ளுக்கு வரத்
தொடங்­கினார்­கள்.தேர்வு எழுத வந்­த­வர்­கள் காலை 9 மணிவரை மட்­டுமே தேர்வு மையத்­துக்குள் அனுமதிக்­கப்­பட்­ட­னர்.தேர்வு தொடங்­கு­வதற்கு 30நிமிடங்­க­ளுக்கு முன்­னதகவே தேர்வு மையத்­தின் அனைத்து நுழைவு வாயில்­க­ளும் மூடப்­பட்­டன. அதன் பிறகு வந்­த­வர்­கள் தேர்வு மையத்­திற்­குள் அனு­மதிக­கப்­ப­டவில்லை.மேலும், தேர்வுமையங்­க­ளுக்­குள் செல்­போன். கால்கு­லேட்­டர், ஸ்மார்ட்கைக்­க­டிகா­ரம் உள்ளிட்ட மின்­னணு சாதனங்­கள் அனும­திக்­கப்­ப­டவில்லை.இந்த தேர்வை கண்கா­ணிக்­கும் பணியில் 987 முதன்மை கண்கா­ணிப்­பாளர்­கள் ஈடுபடுத்­தப்­பட்­டனர். அவர்­கள் தீவிர­மா­க கண்­கா­ணிப்பு பணியில் ஈடுபட்­டனர்.குரூப் 1 தேர்வு தொடர்­பாக டி.என். பி.எஸ்.சி. தலைவர் பிரப­கர் கூறியதா­வது இன்று குரூப் | மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு எழுதிய­வர்­கள் கால­தா­மதம்இன்றி முன்கூட்­டியேதேர்வுமையங்­களுக்கு வர­வேண்­டும்என்று அறிவுறுத்­தப்­பட்டு இருந்­தது.அதன்­படி தேர்வு எழு­திய­வர்­கள் முன்கூட்­டியே தேர்வு மையங்க­ளுக்கு வந்து விட்­ட­னர். டி.என்.பி.எஸ்.சி. தேர்­வுகள் தற்­போது எளி­மைப்­ படுத­தப் ­பட்­டுள்­ளது.இந்த முறை மிக­வும் எளி­மைப்­ப­டுத்த பட்­ட ஓ.எம்.ஆர்.ஷீட் வழங்­கப்­பட்டு உள்­ளது. குருப் 1மற்றும் குரூப் 1 ஏ முதல்நிலை தேர்வு முடிவு­கள்­இன்னும் 2 மாதங்களுக்­குள் எப்­போது வேண்­டுமா­னா­லும் வெளியிடப்­ப­டும்.மெயின் தேர்வு அதில்இருந்து 3 மாதங்­களுக்­குள் நடத்­தப்­படும்.தமிழ்­நாடு அரசுபணியா­ளர் தேர்­வாணையம் கடந்தஆண்டு 10,701பேருக்கு வேலைவாய்ப்பு வழங்­கப்­பட்டு உள்ளது.  இந்த ஆண்டு ஜன­வ­ரி மு­தல் இப்­போது வரை 10.227  பேருக்கு வேலை­ வாய்ப்பு வழங்­கப்­பட்டு உள்ளது. இப்­போது நடந்து வரும் தேர்வு­கள், இனி­மேல் நடைபெற உள்ள தேர்வு­கள் மூலம் 12,231 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்பு இருக்­கி­றது.இவ்­வாறு அவர் கூறினார்.