உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய சிற்றுந்து போக்குவரத்து காவல் துறையால் பறிமுதல்.

நாகர்­கோ­வில் நவ 23 குமரி மாவட்­டம் நாகர்­கோவில் போக்­குவரத்துகாவல் துறை­யால் காலா­வதியான தகுதிச் சான்று முடிவுற்ற காப்­பீடு சான்று உரிய வழித்­தட சான்று இல்­லா­மல் இயக்­கப்பட்ட சிற்றுந்து பறிமுதல் கன்னியா குமரி மாவட்டகாவல் கண்­கா­ணிப்­பா­ளர் சுந்­த­ரவதனம், உத்­த­ரவின் பேரில் நாகர்­கோ­வில் உட்­கோட்ட துணை காவல் கண்­கா­ணிப்­பா­ளர் லலித்­குமார்,மேற்­பார்­வை­யில் நாகர்­கோ­வில் போக்­குவரத்து காவல்நிலைய அதி­காரி­கள் சவேரியார் சந்திப்பு அருகேவாகன சோதனை செய்தபோது,காலாவதியான தகுதிச் சான்று, முடிவுற்றகாப்­பீடு சான்று மற்றும் உரிய வழித்­தட சான்று இல்­லா­மலும் நாகர்­கோ­வில் அண்ணா பேருந்து நிலை­யத்­திலிருந்து அனந்­த­நாடார் குடியை நோக்கி இயக்­கப்­பட்ட சிற்­றுந்து பறிமுதல் செய்­யப்­பட்­டது.பின்­னர் மேற்­படிசிற்றுந்து, மேல் நடவடிக்கைக்­காக தோவாளை வட்­டார போக்­குவரத்து அலு­வல­கத்­தில் ஒப்­ப­டக்கை­ப்பட்டுள்­ளது.