78-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

புது­டெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவை முன்­னிட்டு பிரத­மர் நரேந்திரமோடி,

டெல்லி – செங்­கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்­தார். முன்­ன­தாக, காந்தி நினை­வி­டத்­தில் மரியாதைச செலுத்தினார் .தொடர்ந்து செங்­கோட்டைக்கு வந்­தார்.அங்கு அவருக்கு முப்­ப­டை­க­ளின் அணி­வகுப்பு
மரியாதைஅளிக்­கப்­பட்­டது. அதைஏற்றுக் கொண்ட பிரத­மர் மோடி, தேசியக்கொடியை ஏற்றி வைத்­தார். 11-வது முறை­யாக பிரத­மர் மோடி செங்­கோட்டையில் தேசியக் கொடியைஏற்றி வைத்­துள்­ளார்.அதன் பின்­னர் தேசியக்கொடிக்கு ஹெலி­காப்­டர் மூலம் மலர் தூவப்­பட்­டது. பின்­னர் நாட்டுமக்­க­ளுக்கு சுதந்திரதின உரை­யாற்றி­னார்.அதில் வளர்ந்த பாரதம் 2047 (விக்சித்பாரத்)குறித்து பேசி­னார். 6,000 விருந்தி­னர்­கள்: டெல்லி செங்­கோட்­டை­யில் பிரத­மர் மோடி தலை­மையில் நடை­பெ­றும் சுதந்திர தினவிழாவில் இளை­ஞர்­கள், பழங்­குடியினசமூ­கத்­தி­னர், விவ­சா­யி­கள், சிறப்பு அழைப்­ பாளர்­கள் என 6,000- க்கும் அதி­க­மானசிறப்பு விருந்தி­னர்­கள்பங்­கேற்­ற­னர்.செங்­கோட்டை மற்­றும் சுற்றியுள்ள பகுதி­க­ளில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.நக­ரின் முக்கிய இடங்­க­ளில் துணை ராணு­வப் படை­யி­னர் நிறுத்­தப்பட்டுள்­ள­னர் .பாது­காப்பு பணியில் டெல்லி போலீஸார்,எல்லை பாது­காப்புபடை­யி­னர், ராணுவவீரர்­கள் ஈடு­பட்டுள்­ள­னர்.

டெல்லி முழுவதும் உயர் தொழில்­நுட்ப பாது­காப்பு அம்­சங்­கள் மேற்கொள்ளப்­பட்டுள்­ளன. முக்கிய இடங்­க­ளில் கண்­கா­ணிப்பு கேமராக்­கள் பொருத்­தப்­பட்டு, மக்­கள் நட­மாட்­டம் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­படுகி­றது. அசம்­பா­விதங்­களை தடுக்க உச்­ச­கட்ட பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டுள்­ளன.
ஏற்­கெ­னவே பாது­காப்பு அச்­சுறுத்­தல் விடுக்­கப்­பட்டுள்­ளதால், பாது­காப்பு படை­யி­னர், உளவு பிரிவுபோலீஸார் தீவிர­மாக கண்­கா­ணித்த வருகின்றனர்.