தமிழ்நாட்டில் மீண்டும் பரவும் ‘சிக்குன் குனியா’ காய்ச்சல்

சென்னை, ஆக. 3 தமிழ்­நாட்டில்
தென் மேற்கு பருவமழை
பெய்து வரும் நிலை­யில்
கடந்த சில நாட்­க­ளாக சிக்
குன் குனியா காய்ச்­ச­லும்
அதி­க­மாகபரவ தொடங்கி
உள்­ளது.
டெங்கு, மலே­ரியா,
வைரஸ் காய்ச்­சல், மர்ம
காய்ச்­சல் என பல வகை
காய்ச்­சல் மக்­க­ளுக்கு பரவி
வந்­தா­லும் சிக்குன் குனியா
காய்ச்­சல் வந்­த­வர்­கள் மிகவும்
முடங்கி விடுவார்­கள்.
காய்ச்­சல் வந்­தாலே உடல்சோர்­வ­டையும் உடம்பு நெருப்­பால்
கொதிக்கும் எனவும் சாப்பிட பிடிக்­காது.பசியின்மை அடித்துபோட்டது போல் உடம்பு வலிஏற்­படும். காய்ச்­ச­லில் பலவகை­கள் இருந்­தா­லும்
சாதாரணகாய்ச்­சல் ஆன்டிப­யாடிக் மாத்திரை­க­ளிலேயே சரியாகி விடும்.
பெரும்­பா­லான வைரஸ்காய்ச்­சல் அசுத்­த­மான தண்ணீர் அல்­லது உணவின்மூலம் பரவும். பொது
வான வைரஸ் காய்ச்­சல்ஒரு வாரம்
வரைநீடிக்­கலாம். இந்தவகைகாய்ச்சல் தொண்­டையில்நோய்த் தொற்றை ஏற்­படுத்தும். இதற்கு சரியானசிகிச்­சையைமேற் கொண்டு வந்­தால் சீக்கிரம் குணப்­படுத்தி விட­லாம்.ஆனால் டெங்கு, சிக்
குன் குனியாகாய்ச்­சல் என்
பது ஏ.டி.எஸ்.கொசு
கடிப்ப­தால் வருகிறது.
கடு­மை­யான காய்ச்­சல்மற்றும் தலை­வலி, உடல்
வலி, மூட்டு வலி, வயிற்றுவலி,
தொடர்ச்­சியான
வாந்தி, உடல் சோர்வு ஆகி
யவை இதன் அறிகுறி­க­ளாகும்
.
சிலருக்கு உட­லில்அரிப்பு, சிவ
ப்பு புள்ளிகள்,தோன்றும்.
இந்த காய்ச்­சல் தீவிரமாகி விட்­டால் உட­லின்உட்­பகுதியில் ரத்­தக்கசிவை ஏற்­படுத்தும்.
மூட்டு வலியும் அதி­க­மாகும்
. ரத்­தத்தின் தட்­டையணுக்­கள்

குறைந்து உயிருக்கு ஆபத்­தாகி விடும்.
எனவே சிக்குன் குனியாநோய்

வந்­தால் உட­னடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்­றால் நோய்
பாதிப்­பில் இருந்து தப்­பிக்க­லாம்.
இந்த நிலை­யில் தமிழ்
நாட்டில் சிக்குன் குனியா
காய்ச்­சல் அனைத்து
மாவட்­டங்­க­ளிலும் பரவ
லாக காணப்­படுகிறது.
இந்த ஆண்டு ஜூன்
மாதம் வரை 1,451
பேருக்கு சிக்குன் குனியா
அறிகுறி இருந்­தது. அதில்
331 பேருக்கு சிக்குன்
குனியா உறுதி செய்­யப்பட்டு
ள்­ளது.
கடந்த 4 ஆண்டுக­ளில்
இல்­லாத அளவு இந்த ஆண்டு

பாதிப்பு இருந்­தாலும்,பாதிக்­கப்­பட்ட அனைவரும்நலமுடன்

உள்­ள­தா­க­வும் மக்­கள் அச்சம்
கொள்ளதேவையில்லை
என்றும் பொதுசுகாதாரத்துறை அதி­காரிகள் தெரிவித்துள்­ள­னர்.
காய்ச்­சல் கண்­காணிப்பு மற்றும்
கட்டுப்­பாடு நடவடிக்­கை­கள் தீவிர
மாகமேற்­கொள்­ளப்­பட்டு வருவதால் மக்­கள் அச்­சப்­படத்தேவை இல்லை என்றும்
அதி­காரி­கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *