இராமநாதபுரம் அக்,21 இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில்,கடந்த ஆண்டு மழைநீரில் அடித்து வரப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்திமீன்கள் அதிகளவில் வளர்ந்து காணப்பட்டது இதனால், கண்மாயில் வளரக்கூடிய நாட்டு நன்னீர் மீன்கள் உற்பத்தியாகவில்லை.
இந்நிலையில்,தண்ணீர் வற்றியது சேற்றில் கிடந்த2000 கிலோ ஆப்பிரிக்க கெளுத்திமீன்களை செல்வநாயக்கபுரம் கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள் பிடித்தனர்.இந்த கெளுத்தி மீன்கள் ஒவ்வொன்றும் ஐந்துகிலோவுக்கு மேல் எடைஇருந்தது.பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டிபுதைத்து அழித்தனர்.ஆப்பிரிக்க கெளுத்திமீன்களை வளர்க்க மத்திய,மாநில அரசுகள் தடைவிதித்துள்ளன.இந்த மீன்கள் காற்றை சுவாசிக்கும். இவை இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை.மேலும் 8 வருடங்களுக்கு மேல் வாழலாம் இந்தமீன்கள் நீர் நிலைகளுக்குள் நுழைந்தால், அவற்றை ஒழிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. மேலும்,இந்த மீன்கள் மிகக்குறைந்த நீரில் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் நன்னீர் மீன் இனங்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்பதால் நமது பாரம்பரிய மீன்இனங்கள் அழிந்து வருகின்றன. இந்த மீன்களை பண்ணை குட்டைகள் அல்லது மீன் வளர்ப்பு குட்டைகளில் வளர்த்தால், மழை மற்றும் வெள்ளத்தின் போது குளங்களில் இருந்து தப்பிக்கும் வாய்

ப்பு உள்ளது. ஏரி மற்றும் ஆறுகளில் வெளியேறிமற்ற மீன் இனங்களை அழிக்கும்ஆப்பிரிக்க கெளுத்தி,மீன்களைத்தவிர மற்றபாரம்பரிய மீன் இனங்கள் அழிந்துவிடும்.எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்ககெளுத்தி மீன் வளர்ப்பதுதடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ஆப்பிரிக்க கெளுத்திமீன்கள் வளர்க்கப்பட்டால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைஎடுக்கப்படும்.மேலும்மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள மீன் வளர்ப்போர்,மீன்வளத்துறையின் ஆலோசனைகளை பெற்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மீன்களை வளர்க்க வேண்டும்.






