காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி ஆதி சில்ட்ரன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி கலந்து கொண்டு காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். காசநோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சையுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் சத்தான உணவு உட்கொள்வதும் முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
காசநோயாளிகளின் உடல்நலத்தை மேம்படுத்தவும், சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் இதுபோன்ற ஊட்டச்சத்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பத்தமடை வட்டார காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் ஜான்சன், ஆதி சில்ட்ரன் நிறுவன பணியாளர் மதன், பயிற்சி மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் மூலம் காசநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி, அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலத்திற்கும் சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.