கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா ? அரசு அதிகாரிகளுக்கு
ஐகோர்ட் கண்டிப்பு
சென்னை : ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது’ என , அரசு அதிகாரிகளுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது . தமிழகத்தில் , கடந்த இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை , கடந்த இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி , வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , ‘ பன்னிரண்டு வாரங்களில் இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் , ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும் . உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’ என , கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது . இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி , ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , தலைமை நீதிபதி எம் . எம் . ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி . அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் , நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது தலைமை நீதிபதி , ‘ மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில் , அதன் பின் ஆறு மாதங்களாகியும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்’ என , கேள்வி எழுப்பினார் . அதற்கு , ‘ தேர்தல் தொடர்பான பணிகள் காரணமாக , உத்தரவை அமல்படுத்த இயலவில்லை’ என , அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் , ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது . பணப்பலன்கள் சொற்ப தொகைதான் வரும் . அதை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்
. ‘ இதுபோல் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால் , நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக தண்டனை விதிப்பதை தவிர , வேறு வழியில்லை . ‘ இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் , கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’ என எச்சரித்து , வழக்கு விசாரணையை , நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்
மேலும் , நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம் அல்லது உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்
இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால் , உத்தரவை அமல்படுத்தியே ஆகஸ்ட் வேண்டும் . நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும்படி , அதிகாரிகளுக்கு , தலைமைச் செயலர் அறிவுறுத்த வேண்டும் என , தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம் தெரிவித்தனர்






