“ஆணவக்­கொலை வன்முறை அல்ல, அக்­க­றையா..” – திருமாவள­வன்

சென்னை, ஆக 13 ஆண­வக் கொலை குறித்து நடி­க­ரும் கவுண்டம் ­பாளை­யம்

படத்­தின் இயக்­கு­ன­ரு­மன ரஞ்­சித் பேசி­யது தற்­போது சமூக வலைத்தளங்களில்
சூடான விவா­தத்தை கிளப்பி இருக்­கி­றது.ஆண­வக் கொலை தவறு இல்லை என்ற ரீதி­யில்,”பெற்ற பிள்­ளையே வாழ்க்கை என இருப்­பவர்­கள் பிள்­ளை­க­ளின்
வாழ்க்கை பாதிக்­கப்­ப­டு­கி­றது என்ற அக்­கறை­யி­னால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல”என நேற்று அவர் பேசி இருந்­தார்.இதற்கு பல்­வேறு தரப்பில் இருந்­தும் கடும் கண்ட­னங்­கள் எழுந்து வரு­கி­றது.
இந்த நிலை­யில், ஆணவக் கொலையை குற்­றமல்ல , அக்­கறை என்று ரஞ்­சித் பேசி­யது, சமூக நல்­லி­ணக்கத்­துக்கு எதி­ரா­னது என்று விடு­தலை சிறுத்­தைகள் கட்­சி­யின் தலைவர் திருமாவளவன் பதில்அளித்­துள்­ளார். இதுகுறித்து மேலும் அவர்
பேசி­ய­தா­வது; “ஆண­வக் கொலையை ஒரு குற்­ற­மில்லை என்று சொல்­வது ஒன்று அர­சி­யல் அறி­யா­மை­யாக இருக்க வேண்­டும் அல்­லது வணிக நோக்­க­மாக
இருக்க வேண்­டும் அதை வைத்துபடம் எடுத்து சம்­பா­தித்து லாப­மீட்டவேண்­டும் என்று கருதி சமூ­கத்­திற்கு சமூக நல்­லி­ணத்தை திட்­டத்­திற்கு எதி­ராக பேசி கருத்­துக்­களை பரப்பு­வது நாட்­டுக்கு நல்­லதல்ல அவர்­கள் இது­ போன்ற கருத்­துக்­களை
பரப்­பு­வதுகவலை அளிக்கி­றது.” என்­றார்.
.