சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள்ஐஜியான பொன்.மாணிக்கவேல் வீட்டில்
இன்று (சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.திருநெலவேலிமாவட்டம் பழவூர்
கோயிலில் கடந்த 2005ம்ஆண்டு 13 ஐம்பொன்சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள்
விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.
இந்தசிலைகளை மீட்டபோலீஸார், அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில்
கோடிக்கணக்கில் விற்க உதவியதாகப்புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக.
அப்போது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை
மேற்கொண்டார்.இந்த வழக்கில் துணைகாவல் கண்காணிப்பாளராக இருந்த காதர்பாஷா,
சிறப்பு உதவி காவல்ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு,
பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், திருநெல்வேலி பழவூர் சிலை கடத்தல்
வழக்கில் தொடர்புடைய தீனதயாளனதப்பிக்க வைக்கவே, அவருடன் சேர்ந்துதன்னை பழிவாங்கும்
நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும்,
அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்
காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “பொனமாணிக்கவேல், காதர்
பாஷாஆகியஇருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். சிலை கடத்தல் தொடர்பான
உண்மை வெளிவர சிபிஐ விசாரணைதான்சரியாக இருக்கும்.எனவே, நீதிமன்றத்தின்தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திஇந்த வழக்கை சிபிஐவிசாரிக்க வேண்டும்”என்று உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இதையடுத்து, காதர்பாஷா, சுப்புராஜ் ஆகியோர் மீது சிலை கடத்லுக்குஉதவியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட, அந்த முதல் தகவல் அறிக்கையைப்பயன்படுத்தி கடந்த
2022ம் ஆண்டு சிபிஐவழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் வசித்துவரும் பொன்.மாணிக்கவேல் வீட்டிற்கு இன்றுவந்த 5க்கும் மேற்பட்டசிபிஐஅதிகாரிகள்,இந்தவழக்கு தொடர்பானஆவணங்கள் ஏதேனும்இருக்கிறதா என்பதுகுறித்து இன்று காலை முதல் அங்கு சோதனைநடத்தினர். வழக்கு தொட ர்பாக பொன்.மாணிக்கவேலிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






