அ தி மு க ஆட்சிஅமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி கூறியுள்ளார். வானூர், மயிலம் செஞ்சி சட்ட மன்ற தொகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்ட எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனமிகப் பெரிய பொய்யை சொல்லி மாணவர் களை பெற்றோர் களையும் ஏமாற்றியது . வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய தேர்தல் 2026. தேர்தல் வரை மட்டுமே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகு அதிமுக அழுத்தால் மகளிருக்கு ரூ.1000 திமுக கொடுத்தது”என்றார்.
அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி!






