கடலூர் இரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி!

கட­லூர், ஜூலை, 09: கட­லூர் மாவட்­டம்,செம்­மங்­குப்­பத்­தில் நேற்று (8-7-2025) காலை நிகழ்ந்த         இர­யில் விபத்­தில் உயி­ரி­ழந்த குழந்­தை­க­ளின்பெற்­றோர் மற்­றும் குடும்பத்­தி­ன­ருக்கு தமிழ்­நாடு முதலமைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆறு­தல் கூறி நிதி­யு­தவி அறி­வித்­துள்ளார் அவர் தனது அறிக்­கை யில் கூறி­யி­ருப்­ப­தா­வது: கட­லூர் மாவட்­டம்,செம்­மங்­குப்­பத்­தில் நடந்த மோச­மான இர­யில் விபத்தில் விலை மதிப்­பில்­லாத இரண்டு இளம் பிள்­ளை­களின் உயிர் பறி­போன செய்தி­யைக் கேட்டு அதிர்ச்­சியும், மிகுந்த மன­ வேதனை­யும் அடைந்­தேன்.வாழ வேண்­டிய வய­தில் உயி­ரி­ழந்த
அந்­தத்துளிர்­க­ளின் மர­ணம் என்னை ஆற்­றொன்­னாத்துய­ரில் ஆழ்த்­து­கி­றது.விபத்­தில் உயி­ரி­ழந்த
நிமி­லேஷ் (வயது 12) மற்றும் சாரு­மதி (வயது 16)ஆகிய இரு­வ­ரின் பெற்றோர் மற்­றும் குடும்­பத்­தி
­ன­ருக்கு என் ஆழ்ந்த இரங்க­லைத் தெரி­வித்­துக்கொள்­கி­றேன்.இவ்­வி­பத்தில் காய­ம­டைந்து கட­லூர்
அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரும் நான்கு நபர்­க­ளுக்­கும் சிறப்­பான சிகிச்சை அளித்தி­ட­வும் அறி­வு­றுத்­தியுள்­ளேன்.மேலும் இந்த விபத்­தில் உயி­ரி­ழந்த குழந்­தை­க­ளின் பெற்­றோர்­க­ளுக்கு முதலமைச்­ச­ரின் பொது நிவாரண நிதி­யி­லி­ருந்து தலா ஐந்து இலட்­சம் ரூபாய்
வழங்­கிட உத்­த­ர­விட்­டுள்ளேன். பலத்த காய­மடைந்து சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளுக்கு தலா ஒரு
இலட்­சம் ரூபா­யும், இலேசான காயம் அடைந்­த­வர்­களுக்கு தலா ஐம்­ப­தா­யி­ரம் ரூபாய் வழங்­கி­ட­வும் உத்த­ர­விட்­டுள்­ளேன் என குறிப்­பிட்­டி­ருந்­தார் இந்­நிலை­யில் மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை  பெற்று வந்த சாரு­ம­தி­யின் சகோத­ர­னும் மர­ணம் அடைந்­தார் அவருக்­கும் நிதி உதவி அளிக்கப்­ப­டு­கி­றது.முன்­னதாக,கட­லூர் – செம்­மங்­குப்­பம் பகு­தியில் உள்ள ரயில்வே கேட்டை (கேட் எண்170)நேற்று காலை மாண­வர்­களு­டன் பள்ளி வாக­னம் கடக்க முயன்ற போது விழுப்­பு­ரத்­தில் இருந்துமயி­லா­டு­துறை நோக்கி சென்ற பய­ணி­கள் ரயில் (வண்டி எண் 56813) மோதி­யது. இந்த விபத்தில் ரயில் மோதி­ய­தில் பள்ளி வாக­னம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்­பட்­டது. சத்­தம் கேட்டு அந்த பகு­தி­யில் உள்ள மக்கள் பதட்­டத்­து­டன் சம்­பவ இடத்­துக்கு ஓடி வந்­த­னர்.வேன் இடி­பா­டு­களை அகற்றி உள்ளே சிக்கி இருந்த மாண­வர்­களை மீட்­கும் முயற்­சி­க­ளில் ஈடுபட்­ட­னர்.அப்போ­து­தான் தண்­ட­வா­ளத்­தில் ஒரு மாண­வ­ரின் உடல் சிதறி கிடந்­தது கண்டு அதிர்ச்சி அடைந்­த­னர்.உடல் சிதறிபலி­யான அந்த மாண­வரின் பெயர் நிவாஸ்.இவன்6-ம்வகுப்பு படித்து வந்தான்.வேனுக்­குள் சிக்கி இருந்த மாண­வர்­களை மீட்­டபோது சாரு­மதி என்ற மாணவி உடல் நசுங்கி பலி­யாகி இருப்ப து தெரிந்­தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்­தார்.உட­ன­டி­யாக மாண­வன் நிவாஸ் உட­லும்,மாணவி சாரு­மதி உட­லும் கட­லூர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டது. செழி­யன் (வயது15),விஸ்­வேஸ்(16) உட்­பட3 மாண­வர்­க­ளும் படு­கா­யங்க­ளு­டன் வேனுக்­குள் ரத்த வெள்­ளத்­தில்கிடந்­த­னர்.அவர்­கள் 3 பேரும் மீட்­கப்பட்டு புதுச்­சேரி ஜிப்­மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட னர்.அதில் செழி­யன் சிகிச்சை பல­னின்றி உயி­ரிழந்­தார், இந்த கோர விபத்தில் உயி­ரி­ழந்த சாரு­ம­தியும் செழி­ய­னும் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த அக்கா, தம்பி என்­பதுமிகவும் சோக­மா­கும்.கட­லூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த திரா­விடமணி என்­ப­வ­ரின் மகள் சாரு­மதி,மகன்செழியன் என்­பது குறிப்­பி­டத்தக்­கது.