கணவரை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் குடும்பத்தோடு தீ குளி க்க முயற்சி!

வேலூர், ஜுன் 28-வேலூர் மாவட்­டம்,
குடி­யாத்­தம்,கல்­லூர்,எம்.ஜி.ஆர் நகர்
பகு­தியை சேர்ந்த ரிக்ஷா தொழி­லாளி சத்­தி­ய­கு­மார்(38) சங்­கீதா குடும்­பத்­தி­னர் 5 பேர்குழந்­தை­யு­டன் நேற்று வேலூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக வளா­கத்­தில் திடீ­ரென பெட்ரோல் ஊற்றி தீ குளிக்கமுயற்சி மேற்­கொண்­டார்­கள்.
கடந்த 22 ஆம் தேதி அதே பகு­தியை சேர்ந்த சந்­துரு என்கிற கோழி என்­ப­வர் மது போதை­யில் அவ்­வ­ழி­யாக வந்து கொண்­டி ­ருந்த சத்­யாவை வழி­ம­றித்து கத்­தியை காட்டி மிரட்டி சர­மா­ரி­யாக தாக்­கி­யதா­க­வும், இதனால் படு­காயம் அடைந்த சத்யா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்து சிகிச்சை பெற்­றுள்­ளார்.
இது குறித்து சத்­யா­வின் ம னைவி சங்­கீதா குடி­யாத்­தம் நகர காவல் நிலை யத்­தில் புகார் அளித்­தும் நட­வ­டிக்கை இல்­லாத தால்,பிறகு வேலூர் மாவட்ட காவல்கண்­கா­ணிப்பாளர் அலு­வ­ல­கத்­தில் புகார்
அளித்­துள்­ளார்.அதன் பிறகும் நடவ­டிக்கை எடுக்­கவில்லை என
கூறி ஆத்­தி­ர­ம­டைந்து இன்று தனது
கண­வர் சத்­தியா, தாய் மற்­றும் ஒரு
குழந்தை உட்­பட குடும்­பத்­தி­னர்
ஐந்து பேரு­டன் வேலூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­திற்கு வந்து
பெட்ரோல் ஊற்றி தீக்­கு­ளிக்க முயற்சித்­துள்­ளனர்.இவர்­களை அங்­கி­ருந்து காவல்­து­றை­யி­னர் விரை­வாக செயல்­பட்டு தடுத்து
நிறுத்தி தண்­ணீரைஊற்றிமீட்­டுள்­ளனர்.இதில் சங்­கீதா மயக்­க              ம­டைந்த நிலையில் அவரை 108
ஆம்­பு­லன்ஸ் மூலம் மரு த்­து­வ­ ம­னைக்கு அனு ப்பி வைத்­தனர்.
மேலும் இச்­சம்­ப­வம் குறித்து கிராம நிர்­வாக அலு­வ­லர் புகார் அளித்­தது
அடிப்­படை­யில் சத்­து­வாச்­சாரி காவல் ­து­றை­யி­னர் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வரு­கின்­றனர்.