தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித பனிமய மாதாபேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா

தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித பனிமய மாதா பேராலய திரு விழாவை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.        பத்து நாள்கள் நடைபெற்று வந்த திருவிழா இன்று நிறைவு விழாவை எட்டியுள்ளது. கடந்த பத்து நாள்களாக தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.                                                              பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நிறைவு நிகழ்ச்சியாக (ஆகஸ்ட் 5) காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது.                                              மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது. 11ஆம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ தேர் பவனி நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.                                                                                                                      தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பனிமயமாதா திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.தூத்துக்குடி மாநகரே விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில் இன்று ஒரு நாள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறையாகும்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி (சனிக் கிழமை) வேலை நாளாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *