பச்சிளங்குழந்தைகளுக்கு தங்கமோதிரம்,பரிசுப்பெட்டகம் வழங்கப்பட்டன!
திருநெல்வேலி,டிச.01 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர்பெ.ஜான்பாண்டியனின், 70வது பிறந்த தின விழா, இன்று [நவ.30] பாளையங்கோட்டையில் கொண்டாடப்பட்டது.இதனை யொட்டி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,இன்று [நவ.30] பிறந்தகுழந்தைகள் அனைவருக்கும், “தங்க மோதிரம்”அணிவிக்கப்பட்டது.அத்துடன்,குழந்தைகளுக்கு தேவையான,அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகங்களும் வழங்கப்பட்டன. இவை அனைத்தையும், அக்கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் கண்மணி மாவீரன் வழங்கி,வாழ்த்தினார். நிகழ்ச்சியில், மாநிலஇளைஞர் அணி தலைவர் டாக்டர் வியங்கோ பாண்டியனும், பங்கேற்றிருந்தார்.தொடர்ந்து, மனக்காவலம் பிள்ளை நகரில்,மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும், நெல்லை மாநகரப் பகுதிகளில், கட்சிக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, அந்தந்த பகுதிமக்களுக்குமரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மாநிலதுணைப் பொதுச்செயலாளர் அருண் பிரின்ஸ்,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோபாலகிருஷ்ணன்,”மயோபதி”மருத்துவர் ராமசாமி,தலைமை நிலையச் செயலாளர்”கல்குறிச்சி” சேகர், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ்,மாவட்ட இணைச் செயலாளர் சின்னத்துரை பாண்டியன், வி.கே.புரம் நகரச்செயலாளர் மோகன் மள்ளர்,மாணவர் அணி செயலாளர் பொன்முருகன்,மகளிர் கண்மணிசர்மிளா, நிர்வாகிகள் ஆரோக்கிய சிங்கராயன்,ராஜேஷ் ஆகியோர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.






