4 நாட்­கள் அரசு முறை பயணமாக தமிழகம் வருகி­றார் ஜனா­தி­பதி!

புது­டெல்லி நவ.18 ஜனாதி­பதி திரவுபதி முர்மு 4 நாட்­கள் அரசு முறை பயணமாக வரும் 27ம் தேதி அன்று தமிழ்­நாடு வருகிறார்.அதன்­படி, டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமா­னப்­படை தளம் வரும் ஜனாதி­பதி,அங்­கிருந்து ஹெலிகாப்­டர் மூலம் உதகை செல்கிறார்.நவம்­பர் 28ம் தேதி மற்றும் 29ம்தேதிகளில் உத­கை­யிலும்,நவம்­பர் 30ம் தேதி திருவாரூரிலும் சில நிகழ்ச்­சிகளில் ஜனாதி­பதி பங்­கேற்க உள்ளார்.ஜனாதி­ப­தியின் வரு­கையை முன்னிட்டு,பாதுகாப்பு ஏற்­பாடுகள் தொடர்­பாக காவல் துறை­யி­னர் ஆலோ­சனை நடத்தி வருகின்­ற­னர்.