ஸ்ரீமுஷ்ணம் அருகே 55வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது வாலிபர் கைது ஆய்வாளர் வீரசேகரன் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஞானமணி இவருடைய மகன் ஞானகுரு வயது 21 தீபாவளி முன் தினம் அதே ஊரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு கணவனை இழந்து தனிமையில் வசித்து வந்த நிலையில் ஞானகுரு இரவு சுமார் 12 மணி அளவில் மது அருந்திவிட்டு மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியை நாடினார் இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மூதாட்டி ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வீரசேகரன் புகார் கொடுத்துள்ளார் விசாரணை செய்த ஆய்வாளர் ஞான குரு மீது வழக்கு பதிவு செய்து
விருத்தாச்சலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார் ஞானகுரு மூதாட்டி இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது






