புதுடெல்லி, நவ. 2 1956 நவம்பர் 1-ல்இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை,அவர்களது மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன.இந்த நிலையில் மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு, அதன் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநிலமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.தனது பதிவுகளில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, ‘கன்னடா ராஜ்யோத் சேவா என்பது, கர்நாடகாவின் முன்மாதிரியான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் ஒரு சிறப் பான நிகழ்வாகும்.அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை உருவாக்கும் சிறந்த மனிதர்களை இம்மாநிலம் பெற்றுள்ளது. கர்நாடகாவின் மக்கள் எப்போதும் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாகவும், வெற்றியுடனும் இருக்கட்டும்.மத்திய பிரதேசம் ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் அதன் நாட்டுப்புற மரபுகள் மற்றும் பழங்குடி கலாச்சாரத்தால் விவரிக்கப்படுகிறது இந்த மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைய விரும்புகிறது கேரளா அதன் மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகள் வலிமையான பாரம்பரியம் மற்றும் கடினமான உழைக்கும் மக்களுக்காக பெயர் பெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் கேரள மக்கள் தங்களின் முத்திரைகளை பதித்துள்ளனர். இம்மாநில மக்கள் வருங்காலத்தில் முன்னேற்றம் அரியானா அதன் வளமான வரலாற்றுப் பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா, ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துக்களை அந்தந்த மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்கள் உருவான தினம்-பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து.






