மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்விடுமுறையால் அருவிகளில் குவிந்த மக்கள்!

நெல்லை, அக். 14 தமிழகத்தில் வடகி­ழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெல்லை,தென்­காசி, தூத்துக்குடி
மாவட்­டங்­க­ளில் கடந்த சில நாட்­க­ளாகவே மாலை நேரங்­க­ளில் பரவ­லாக மழை பெய்து வருகி­றது.
நெல்லை மாவட்­டத்­தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில்
பிற்­ப­கலில் வானம் மேக­மூட்­டத்து
டன் காணப்­பட்­டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்­ப­குதி­யில் அமைந்துள்ள அணை­கள், மலைப் பிர­தே­சங்கள்,  புற­நகர் பகுதி களில் பரவ­லாக மழை பெய்ய தொடங்­கி யது.புற­நகரில் சேரன்­ம­கா­தேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்­டார பகுதி­களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்­தது. இதமான காற்றும் வீசியதால் மக்­கள் மகிழ்ச்சிஅடைந்­த­னர். களக்­காடு மற்றும் அதன் சுற்று வட்­டா­ரத்தில் கன­மழை பெய்­தது. மாலை­யில் சுமார் 1 மணி நேரத்­திற்கும் மேலாக களக்­காடு மலைப்­ப­குதியில் பெய்த மழை­யால் தலைய­ணை­யில் நீர் வரத்து அதிகரித்­தது. அங்கு அதிக ­பட்­ச­மாக 27.40 மில்லிமீட்­டர் மழை பெய்­தது.ஆயுதபூஜை விடுமுறை என்­ப­தால் சுற்றுலா பயணி­கள் கூட்­டம் அங்கு அதிக­ரித்து காணப்­பட்­டது. தொடர்ந்து 3 நாட்­கள் தொடர் விடுமுறை என்­பதால் பாப­நாசம் அகஸ்­தி­யர் அருவி, மணிமுத்­தாறு அருவிகளிலும் இன்று காலை முதலே சுற்றுலாபயணிகள் கூட்­டம் அதிகா­மாக இருந்­தது. மாநகரில் மழை பெய்­ய­வில்லை.எனினும் மாலை நேரத்­தில் குளிர்ந்த காற்று வீசி­யது.அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்­வலாறு அணைபகுதிகளில்பரவ­லாக மழை பெய்­தது.அதிக­ பட்­ச­மாக சேர்­வ­லா­றில் 27 மில்லி மீட்­ட­ரும்,பாப­நாசத்தில் 14மில்லிமீட்­ட­ரும் மழை பதிவாகியது. கொடுமுடி­யாறு அணையின் நீர்பிடிப்புபகுதிகளில் கடந்த 1 வாரமாகதொடர்ந்து மழை பெய்துவருகி­றது. நேற்றும் அங்கு 17 மில்லிமீட்­டர் மழை பதிவாகியது. பாப­நாசம் அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தி­னம் 430 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்­ப­குதியில் நேற்று பெய்த மழை­யால் நீர்­வரத்து அதிகரித்­தது. இன்று காலை வினாடிக்கு 552 கனஅடி நீர் வந்து கொண்­டிருக்கி­றது. அணையில் இருந்து வினாடிக்கு 504கனஅடி நீர் வெளி­யேற்­றப்­பட்டு வருகி­றது. அணைநீர்­மட்­டம் 94.50 அடியாக உள்­ளது.சேர்­வ­லாறு அணையில் 106.33 அடிநீர் இருப்பு  உள்­ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்­சோலை வனப்­ப­குதியில் நேற்று பிற்­ப­கலில் தொடங்கி இரவு வரை­யி­லும்பரவ­லாக மழைபெய்­தது. குறிப்­பாக நாலு­முக்கு, ஊத்து எஸ்­டேட்டுகளில் கன­மழை பெய்­தது. நாலுமுக்­கில் 29 மில்லிமீட்­ட­ரும்,
ஊத்தில்26 மில்லிமீட்­ட­ரும் மழை
பதிவாகியது. காக்­கா­சி­யில் 19 மில்லிமீட்­டர் மழை பதிவாகியது.
தென்­காசி மாவட்­டத்­தில் சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்­டார பகுதிகளில் நேற்று மாலை பரவ­லாக மழை பெய்­தது. அதிக­பட்­ச மாக அங்கு 31மில்லிமீட்­டர் மழை பதி­வாகியது. ராமநதியில் 2மில்லி மீட்­டர் மழை பெய்­துள்­ளது. அந்த அணை­யின் நீர்­மட்­டம் 55.50 அடி­
யாக உள்­ளது. கடனாஅணை நீர்­மட்­டம் 46 அடி­யாகவும், கருப்­பா­நதி
அணை நீர்­மட்­டம் 49.87அடியாகவும் உள்­ளது.குண்­டாறு அணை நிரம்பி
வழிகி­றது.மேற்கு தொடர்ச்சிமலை­யை­யொட்டி அமைந்துள்ள குற்­றா­லம் மெயினருவி, ஐந்­த­ருவி,பழைய குற்­றா­லம் அருவி­களில் தண்ணீர் ஆர்ப்­பரித்து கொட்டி வருகி­றது.
தொடர் விடுமுறை என்­பதால் காலை முதலே சுற்­றுலாபயணிகள் அங்கு முகாமிட்டு குளித்து மகிழ்­கின்­றனர்.தூத்துக்குடி மாவட்­டத்­தில் கயத்­தாறு, கடம்­பூர் மற்றும் அதன் சுற்று வட்­டார பகுதிகளில்
நேற்று மாலையில் கன­மழை கொட்டியது. இத­னால் தாழ்­வான பகுதிக­ளில் மழை­நீர் தேங்­கியது.
சாலைகளில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடியது.கடம்­பூரில் அதிக­பட்­ச
மாக 68 மில்லிமீட்­டர் மழை பெய்­தது. கயத்­தாறில் 27 மில்லிமீட்­டர்
மழை பெய்­தது. சூரன்­குடி, சாத்­தான்கு­ளம் மற்­றும் அதன் சுற்று
வட்­டாரகிராமங்­க­ளில் பரவ­லாக
மழை பெய்­தது.