நாகர்கோவில் – அக் – 14 குமரியின் குலசேகரப்ப ட்டணம் என்று அழைக்கப்படும் புலவர் விளை அருள்தரும் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மகிஷாசுரசம்ஹாரம்விழா. வெகுவிமர்சையாக கொண்டாடப்ப டுவது வழக்கம். அதன் படி இந்தஆண்டு 13-வது தசரா பெருந்திருவிழாமகிஷாசுர சம்ஹாரம் பெருந்திருவிழா புரட்டாசி 17ம் தேதி வியாழக்கிழமை முதல் புரட்டாசி 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 11 நாட்க்கள் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. தினசரி மாலை ஆதிபராசக்தி பூஜையும்,புலவர்களை பஜனை குழுவினரின் பஜனையும், கொலு பூஜையும், திருவிளக்கு பூஜையும்,அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. பத்தாம்நாள் நிகழ்ச்சியியான நேற்று விஜயதசமியை முன்னிட்டு காலை 6மணிக்கு தேவி ஸ்ரீ முத்தாரம்மனுக்கு அபிஷேகமும் தீபாராதனை, கணபதிஹோமம் , குழந்தைகளுக்கு திரு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியும்,மகாசக்தி ஹோமபூஜை,மகாகும்பாபி ஷேகம், உச்சகால பூஜையும் நடைபெற்றது. மாலை 5மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தலைமையில் மகிஷாசுரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி சோபா துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அதிமுக 11-வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா, பாஜக 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான். ஐயப்பன், வழக்கறிஞர் ஆனந்த், ராஜன் & கோசி.இ.ஓ. ராஜன், எம்.எஸ்.எஸ். ஆசான் டாக்டர். எஸ். பிரகாஷ் , நாகராஜன், உட்பட பலர்சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்குஇளநீர்அபிஷேகம்,7.30 மணிக்கு மாவிளக்கு பூஜையில் பெண்கள் மாவிளக்கு ஏந்திஅம்மனை வலம் வந்தனர். இரவு எட்டு மணிக்கு மகாலெட்சுமி அலங்காரபூஜையும்நடைபெற்றது.விழாஏற்ப்பாடுகளை புலவர்விளை ஊர் நிர்வாககமிட்டி தலைவர் செல்வராஜன், துணை தலைவர் சேகர், பொருளாளர்கோபா லகி ருஷ்ணன்,செயலாளர் நாகராஜன்,பொது செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும்புலவர் விளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.
குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை அருள்தரும் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மகிஷாசுர சம்ஹாரம் விழா!






