4 திசைகளிலும் சீறிப்­பாய்ந்த விமா­னங்­க­ளின் சாக­சத்தை 15 லட்­சம் பேர் கண்டு களித்­த­னர்!

சென்னை,அக்.7 இந்திய விமா­னப்­ப­டை­யின் 92-ம் ஆண்டு கெண்­டாட்ட த்தை ­யொ ட் டி சென்னை மெரினா கடற்­கரை­யில் இன்று(ஞாயிற்­றுக்­கி­ழமை) விமான சாகச நிகழ்ச்சி நடை­பெற்­றது. இதில் 72 விமா­னங்­க­ளில் வீரர்­கள் சாகச நிகழ்ச்­சியை நடத்தி காட்­டி­னார்­கள்.காலை 11 மணிக்கு தொடங்­கிய இந்த சாகச நிகழ்ச்­சியை காணமெரினா கடற்­கரை­யில் லட்­சக்­க­ணக்­கா­னோர் திரண்­ட­னர்.இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமானசாகச நிகழ்ச்சி நடைபெற்­றது. அதன் பிறகு21 வரு­டங்­கள் கழித்து மீண்­டும் சென்­னை­யில் நடை­பெ­றும் விமானசாகச நிகழ்ச்சி என்­பதால் அதனை கண்டுரசிக்க பொது­மக்­கள் மத்தி­யில் மிகுந்த ஆர்­வம் இருந்­தது.விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்­ப­தற்­காக மெரினா கடற்­கரைக்கு இன்று காலை 7 மணியில்இருந்தே பொது ­மக்கள் வர தொடங்­கி­னார்கள். கோவில் திரு ­விழாக்­க­ளுக்கு செல்­வது போன்று கார்கள் மற்­றும் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் மெரினாகடற்­கரை நோக்கி பொது­மக்­கள் குடும்பத்தோடு படை­யெ­டுத்த­னர். மெரினா கடற்கரை சாலை பகுதிமற்­றும் அதனை சுற்றி 5கிலோ மீட்­டர் தூரத்துக்கு வாக­னங்­கள் அமதிக்­கப் ­ப­ட­வில்லை.இத­னால் தங்­க­ளது வாகளங்­களை தூரத்­தி­லேயே நிறுத்தி விட்டு கடற்­கரைக்கு மக்­கள் நடந்தே சென்­ற­னர். காலை 10 மணி­ய­ள­வில் மெரினா கடற்­கரை மணற் பரப்பு முழு­வ­தும் மனித தலைக­ளா­கவே காட்சி அளித்தன. 11மணிக்கு சாகச நிகழ்ச்சி தொடங்­கி­யதும் மக்­கள் மிகுந்த ஆர்வத்­து­டன் அதனை கண்டு ரசித்­தார்­கள். சிறுவர்­கள் முதல் வய­தான பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ருமே விமானசாகச நிகழ்ச்­சியை கைதட்டி ரசித்து மகிழ்ச்சி ஆர­வா­ரத்­தை வெ­ளிப்­ப­டுத்­தி­னார்கள்.விமா­னங்­கள் தொடர்ச்சி சாகசத்­தில் ஈடு­பட்­டதை மெய்­சிலிர்த்த படியே கண்டு ரசித்­த­னர். தங்­க­ளது செல்போன்­க­ளில் சாகசகாட்­சிகளை வீடி­யோக்க­ளா­க­வும் படம்­பி­டித்­தனர்.இன்று காலை­யில் வெயி­லின் தாக்­கம்­ குறை­வாக இருந்த நிலையில் சாகச நிகழ்ச்சி தொடங்­கிய போது வெயி­லின் தாக்­கம் அதிக­மா­கவே காணப்­பட்டது. அதனை பொருட்ப­டுத்தா­மல் இருப்­பி­னும் ­பொது­மக்­கள் மிகுந்த உற்­சாகத்தோடு சாகச நிகழ்ச்­சி­களை பிரமித்து பார்த்­தார்­கள்.இதன் கார­ண­மாக மெரினா கடற்­கரைபகுதி காணும் பொங்கல் தினத்­தன்று காணப்ப­டு­வது போல களைகட்டிகோலா­கல­மா­க காட்­சி­ய­ளித்­தது.விமானசாகசத்­தில் ஈடுபட்ட வீரர்­கள் விமா­னத்தில் இருந்து கயிறு கட்டிகீழே இறங்­கி­யும், பாராசூட்மூலம் கீழே குதித்தும் சாகசத்­தில் ஈடு­பட்ட­னர்.அதனை கடற்­கரை மணற்பரப்­பில் வெயிலை­யும் பொருட்­ப­டுத்தா­மல்  பொது மக்­கள் தரை­யில் அமர்ந்தி­ருந்து மிரட்­சி­யோடு கண்டு ரசித்­ததை காண முடிந்தது.சாகசத்­தில் ஈடுபட்ட விமா­னங்­கள் 4 திசைக­ளி­லும் பயங்­கரசத்­தத்தோடு சீறிப்பாய்ந் தன. அப்போது புகைகளை கக்­கிய வண்ணபடியே மிக அரு­கா­மையில் வட்­ட­மிட்­ட படியே பறந்து சென்­றன.இதுகூடி­யி­ருந்த பொதுமக்­க­ளின்கண்­களுக்கு விருந்து படைப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது மெரினா கடற்­கரை­யில் மட்­டும் 3 லட்­சம் முதல் 4 லட்­சம் பேர் வரைவிமான சாகசத்தை  இன்று கண்டுகளிக்­கின்ற­னர் . மெரி­னா­வில் நடை­ பெறும் விமான சாகச ­நிகழ்ச்­சியை இந்த கோவ­ளம் முதல் மெரினாவரை உள்ள கடற்­கரை பகுதி முழு­வதும் கண்­டு­க­ளிக்­கலாம் என விமா­னப் படை அதி­கா­ரி­கள்­ தெ­ரி­வித்து இருதனர். இந்­த­ன் ­படி கோவ­ளத்தில் இருந்து கிழக்­கு ­கடற்­கரை சாலை­யில் உள்ள கடற்கரை ­ப­கு­தி­கள் மற்­றும் மயி­லாப்­பூர்,சாந்தோம்.திரு­வ ல்­லிக்­கேணி, சேப்­பாக்­கம்,அடையாறு,திரு­வான்­மி­யூர், பெசன்ட்நகர், கொட்­டிவாக்­கம். நீலாங்­கரை,பால­வாக்­கம் உள்­ளிட்ட கட ற்கரை ­ப­கு­தி­கள் முழு­வ­துமே இன்று தங்கள் நின்­ற­ வீட்டுமாடி படி பொது­ மகக்­க­ளில் ள்ஞ விமா­ன ­சா­க சத்தை கண்டு ரசித்­த­னர்.இதன் மூலம் 15 லட்­சம் பேர் வரை இன்­றைய  விமான சாகசத்தை கண்டு ரசித்­ததாக விமா­னப்­படை அதிகா­ரிகள்­­ தெரி­வித்து உள்­ளனர் இந்த சகசா நிகழ்ச்சி விமான சாதனை புத்­தகத்­தில் இடம் பெற்­றது.