சென்னை, செப்.30 தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில்புதிய அமைச்சர்களாக செந்தில்
பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கவர்னர் மாளிகையில்பதவி ஏற்பு விழா நடந்தது.
புதிதாக பொறுப்பெற் ற
அமைச்சர்களுக்கான துறைகள் வருமாறு செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை.கோவி செழியன் உயர்கல்வித் துறை,ஆர்.ராஜேந்திரன் சுற்றுலாத் துறை,ஆவடி நாசர் சிறுபான்மைநலத்துறை மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை, இதுதவிர, குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா.ராமசந்திரன் அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சிமஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.அதேபோல் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை ,கிண்டி ஆளுநர் மாளிகையில்நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில், செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் ,ஆவடி நாசர், கோவி.செழியன்ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர்,அதிகாரிகள், உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பதவியேற்புநிகழ்ச்சியில் பங்கேற்றார்.மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலர் வைகோ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்ரா. முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. பணமோசடி வழக்கில் மூன்று நாள்களுக்குமுன்பு நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்தஅவர், மீண்டும் அமைச்சராகப்பொறுப்பேற்றிருப்பதை எதிர்க்கட்சிக்ளை சாடி வருகின்றன.விளையாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். சனாதன ஒழிப்பை ஒருஆயுதமாக மாற்றி பாஜகவுக்குஎதிராக தேசிய அளவில் கொண்டு சென்றது, எய்ம்ஸ்மருத்துவமனை விவகாரத்தில் செங்கல் விஷயத்தைகையில் எடுத்து பேசி பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்தது.விமர்சனங்களுக்கு மத்தியில்பார்முலா 4 கார் போட்டிகளைவெற்றிகரமாக நடத்தி காட்டியது. முதல்வர் ஸ்டாலின்அமெரிக்கா சென்ற போதுஆட்சி நிர்வாகத்தை சிறப்பாககவனித்துக்கொண்டது எனபல்வேறு நற்பெயரையும் சம்பாதித்துள்ளார்.அதே வேளையில்வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றனர்.அதற்கு பதிலளித்திருக்கும்அவர், “என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக்கொண்டு, எனது பணிகள்மூலம் பதில் அளிப்பேன்” எனபதிலடி கொடுத்துள்ளார்.
மறுத்தவர் கையாலேயே மீண்டும் பதவி ஏற்பு!அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில்பாலாஜியின்அமைச்சர் பதவி பறிக்கப்பட காரணமாகஇருந்தவர் கவர்னர் ரவி. கைது செய்யப்பட்ட ஒருவர், இலாகா இல்லாத அமைச்சராகஇருக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால் திமுக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் வலுத்தது. தற்போது உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலையாகி உள்ளசெந்தில் பாலாஜி மீண்டும் தான் ஏற்கனவேவகித்து வந்த அதே துறைகளின் அமைச்சராகி இருக்கிறார். அவருக்கு தற்போது,கவர்னர் ரவியே பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் ஆகியோர் பங்கேற்கவில்லை.






