நாகர்கோவில்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து தமிழகத்தின் அண்டை மாவட்டமான குமரிக்கு வருவோரை களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை பரிசோதனை செய்து வருகின்றயினர் இந்நிலையில், கேரளாவில் இருந்துனர்.சுற்றுலா தமான கன்னியாகுமரிக்கு வரும் கேரள சுற்றுலாப் பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி மேற்பார்வையில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நிபா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகரப் பகுதியின் நுழைவு வாயிலான விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது கேரளா பதி வெண் கொண்ட கார் மற்றும் பிற வாகனங்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடமும், காய்ச்சல் கண்டுபிடிக்கும் தெர்மாமீட்டர் கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள் தினமும் இரண்டு ஷிப்ட்டகளாக சுகாதாரப் பணியாளர்கள் இந்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் ஹோட்டல் தங்கும் விடுதிகளிலும் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் வெளியூர் மற்றும் கேரளா சுற்றுலா பயணிகள் குறித்து தெரிவிக்கவும் சுகாதாரத் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 800 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அதில் வந்த நபர்களிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது அதன்படி இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும் எனவும் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் எதிரொலி: குமரியில் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை






