சிவகங்கை . செப்.25.நாம் வாழ்கின்ற காலத்தில் என்ன நன்மைகள் செய்தோம் என்பதை விட நமது மறைவிற்கு பின்பு நம்மை பற்றி
நினைவு கூறும் வகையில் நமது செயல் அமைய வேண்டும்.அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் , தேவகோட்டை சிதம்பர நாத புரத்தைச் சேர்ந்தவர் தேவ.சீனி. சுந்தரம் (89). இவர் தனது இளமை காலந்தொட்டு பெரியாரின் பற்றாளராக வலம் வந்து பெரியாரின் கொள்கை களை மக்களிடத்தில் கொண்டு சென்று வந்தவர். இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 21-ந்தேதி (சனிக்கிழமை ) இரவு 07.00 மணியளவில் இயற்கை எய்தினார். தாம் இறந்த பிறகும் தனது உடல் மண்ணுக்குள் செல்வதைக் காட்டிலும் மற்றவர்களுக்கு உப யோகரமாக இருக்க வேண்டு மென்று எண்ணி, தனது முழு உடல் தானம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.அதன் பேரில், அவரது எண்ணத்தை செயலாக்க எண்ணிய குடும்பத்தினர்கள் இவ்வுலகைவிட்டு அவர் பிரிந்து சென்றாலும்,அவரது உடலை முறைப்படியான இறுதிச் சடங்குகள் ஏதும் இன்றி 23ந்தேதி (திங்கள்) காலை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துனைவக்கும் முழு உடல் தானமாக வழங்கப்பட்டது.முன்னதாக, அவரது உடலை மருமகள் சசிகலா உள்பட பெண்கள் தோளில் சுமந்து இறுதிப் பயணத்தை நடத்தினர். அவரது எண்ணத்தை குடும்பத்தினர்கள், உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் அனைவரும் சிறப்பித்தனர்.
தேவகோட்டை தேவ சீனி சுந்தரம் முழு உடல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம்






