தேவகோட்டை தேவ சீனி சுந்தரம் முழு உடல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம்

சிவ­கங்கை . செப்.25.நாம் வாழ்கின்ற காலத்­தில் என்ன நன்­மை­கள் செய்­தோம் என்­பதை விட நமது மறைவிற்கு பின்பு நம்மை பற்றி
நினைவு கூறும் வகை­யில் நமது செயல் அமைய வேண்டும்.அத­ன­டிப்­படை­யில், சிவ­கங்கை மாவட்­டம் , தேவ­கோட்டை சிதம்­பர நாத புரத்­தைச் சேர்ந்­த­வர் தேவ.சீனி. சுந்தரம் (89). இவர் தனது இளமை காலந்தொட்டு பெரியாரின் பற்­றாளராக வலம் வந்து பெரியாரின் கொள்­கை களை மக்­க­ளிடத்தில் கொண்டு சென்று வந்­தவர். இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 21-ந்தேதி (சனிக்கிழமை ) இரவு 07.00 மணியள­வில் இயற்கை எய்தி­னார். தாம் இறந்த பிற­கும் தனது உடல் மண்ணுக்­குள் செல்­வ­தைக் காட்டி­லும் மற்­ற­வர்­க­ளுக்கு உப யோ­கரமாக இருக்க வேண்டு ­மென்று எண்ணி, தனது முழு உடல் தானம் செய்­வ­தாக குறிப்பிட்டுள்­ளார்.அதன் பேரில், அவரது எண்­ணத்தை செய­லாக்க எண்ணிய குடும்­பத்தி­னர்­கள் இவ்­வு­லகைவிட்டு அவர் பிரிந்து சென்­றா­லும்,அவரது உடலை முறைப்­ப­டியான இறுதிச் சடங்­குகள் ஏதும் இன்றி 23ந்தேதி (திங்­கள்) காலை சிவ­கங்கை மருத்துவக் கல்­லூரி மருத்துனைவக்கும் ­முழு உடல் தான­மாக வழங்­கப்­பட்­டது.முன்­னதாக, அவ­ரது உடலை மருமகள் சசி­கலா உள்­பட பெண்­கள் தோளில் சுமந்து இறுதிப் பயணத்தை நடத்தி­னர். அவரது எண்­ணத்தை குடும்­பத்தி­னர்­கள், உறவி­னர்­கள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்­கள் , சமூக ஆர்­வ­லர்­கள் அனை­வரும் சிறப்பித்­த­னர்.