இறந்தும் இளம் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர் சென்னையில் நெகிழ்ச்சி!

சென்னை: தமிழ்­நாட்­ டில் மூளைச்­சாவு அடை­யும் நபர்­க­ளி­டம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறும் எண்­ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்­பாக, இரு­தயம்,நுரை­யீரல் ஆகிய உடல் உறுப்புகள் மூளைச் சாவு அடைந்­த­வர்­க­ளி­டம் இருந்து தான் பெரும்­பான்­மை­யாக பெறப்­ப­டுகிறது. இந்நி­லை­யில், பல இருதய மற்றும் நுரை­யீ­ ரல் பிரச்­ச­னையால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளிகள் உறுப்புக்­காக தமிழ்­நாடு உடல் உறுப்பு மாற்று ஆணை­யத்தில் பதிவு செய்து காத்திருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு மூளைச்­சாவு அடைந்­த­வர்­க­ளி­டம் இருந்து பெறப்­ப­டும் நுரை­யீரல் மற்றும் இருதய நோயா­ளிகளுக்கு பதிவின் அடிப்­ப­டை­யில் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டுகிறது. இந்த நிலை­யில், தஞ்­சாவூர் மருத்துவக்கல்­லூரி மருத்துவமனை­யில் மூளைச்சாவ­டைந்த ரு இளை­ஞரி­டம் இருந்து உறுப்பு மாற்று சிகிச்­சைக்­காக நுரை­யீரல் தான­மாக பெறப்­பட்டு சென்­னை­யில் உள்ள இரு இளம் பெண்­ணுக்கு பொருத்தி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­ டுள்­ளது. சென்­னை­யைச் சேர்ந்த இந்த இளம் பெண் இறுதிநிலை நுரை­யீரல் நோயால் பாதிக்­கப்­பட்டு கடந்த 5 ஆண்­டுகளாக ஆக்­சிஜன் சுவாசசிகிச்­சை­யின் கீழ் வீட்டி­லேயே இருந்து வந்துள்­ளார். ஒரு நாளுக்கு ஏறக்­கு­றைய 10லிட்­டர் ஆக்­சிஜன் இவ­ருக்கு தேவை­பட்டு வந்­ ததாக கூறப்­ப­டுகிறது. இந்நி­லை­யி ல் , நுரை­யீரல் மாற்று அறுவை சிகிச்­சை­காக காத்திருந்துள்­ளார். இந்நி­லை­யில், தஞ்­சா­வூரில் மூளைச்­சா­வால் இறந்த இளை­ஞரின் நுரை­யீரல் சென்­னை­யில் உள்ள பெண்­ணுக்கு பொருத்த முடிவு செய்­யப்­பட்­டது. அதன் அடிப்­ ப­டை­யில், இளை­ஞரின் நுரை­யீரல் விமா­னம் மூலம் சென்­னைக்கு கொண்­டுவரப்­பட்­டது. பின்­னர், மருத்துவம­னையில் தாயர் நிலை­ யில் இருந்த பெண்­ணிற்கு தான­மாக பெறப்­பட்ட நுரை­யீர­லைப் பொருத்­தும் சிகிச்­சையை ரேலா மருத்துவ மனையின் உறுப்புமாற்று சிகிச்சை மருத்துவர்­கள் குழு­வால் மேற்­கொள்­ளப்­பட்­டது. 5 மணி நேரம் நீடித்த இந்த உறுப்பு­ மாற்று சிகிச்சை வெற்றி­மாக முடிவ­டைந்துள்­ளது என மருத்துவமனை நிர்­வா­கம் தெரிவித்­ துள்­ளது.