தலை இல்லாத உடலுக்கு பிரேத பரிசோதனையா? மருத்துவர்கள் மறுப்பு; தலையை தேடிவரும் போலீசார்!

ஆற்­காடு,செப்,20-தலை இல்லாத உடலை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்­பிய உடலை மருத்­து­வர்­கள் மறுத்­த­தால் போலீ­ஸார் தலை­யைத் தேடி வரு­கின்­றனர்
இராணிப்­பேட்டை மாவட்­டம் திமிரி அடுத்த விளா­ரி­யில் வாலி­ப­ரின் சடலம் மிதந்து இருப்­பதாக திமிரி
போலீ­சா­ருக்கு தக­வல் கிடைத்­தது
அதன் பேரில் இன்ஸ்­பெக்­டர் தன­லட்­சுமி,மற்­றும் போலீ­சார் தீய­ணைப்பு வீரர்­க­ளு­டன் அங்கு
சென்று அழு­கிய நிலை­யில் மிதந்த உடலைமீட்டு பிரேத பரி­சோ­த­னைக்­காக வேலூர் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­தனர். மேலும் அது தொடர்­பாக விசா­ர­ணை­யில் அதே கிரா­மத்­தில் காணா­மல் போன­தாக புகார் அளிக்­கப்­பட்­டுள்ள வெங்­கடேசன் (28) என தெரிய வந்­தது. இதற்கிடையே மருத்து­வமனையில்
பிரேத பரி­சோத­னைக்கு உட­லில் தலை­யில்­லா­தது கண்ட மருத்­து­வர்­கள் உடனே போலீ­சா­ருக்கு தலையை கண்டு பிடித்து கொண்டு வந்­தால் தான் பரி­சோ­தனை செய்ய முடி­யு­மென மறுத்­து­விட்­ட­னர்.
இத­னை­ய­டுத்து போலீ­சார் வேறு வழி­யின்றி சம்­பவ இடத்­திற்கு சென்று கிணற்று நீரை வெளி­யேற்றி தலையை தேடும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். தலையைத் தேடி­டும் இச்­சம்­பவம்
அப்­பகு­தி­யில் பர­பப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.