சென்னை, செப். 15 கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மதவேறுபடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம்பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும்அழைக்கிறார்கள். ஓணம்பண்டிகைநாளை(செப்.15)கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் ஓணம்திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,கேரளமக்களின்பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம்திருநாள் உலகெங்கிலும் வ ழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை(15.9.2024) கொண்டாடப்படுகிறது. அத்தப்பூககோலம் , அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ,போட்டிகள் எனமக்கள் அனைவரும் ஒன்று கூடிமகிழும் நாளாகத்திருவோணம் அமைந்துள்ளது.நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர் கொள்ளமுடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும்,அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணிர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக்காணவேண்டும்.திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் எனறால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத்தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்தவகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்டநிலச்சரிவின் போதுதமிழ்நாடு அரசின்சார்பில் 5 கோடி ரூபய் நிதியுதவி அளிதத தோடு , மீட்பு,மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம் பெருமலை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்ட குணத்துடன் மீண்டும் கேரளா மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அழிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன் சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளை கொண்டாடும் என்று அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஓணம் திருநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்த






