கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!!

கள்­ளக்குறிச்சி: கள்ளக்­குறிச்சி மாவட்­டம் கனியா­மூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார்சாலை­யோர தடுப்பு கட்டை­யில் மோதி விபத்துக்­குள்­ளா­னது. தமிழ் திரைப்­பட நடி­கர் ஜீவா மற்றும் அவரது மனைவியு­டன் கள்­ளக்­குறிச்­சியில் இருந்து சென்னைக்கு திருப்பிய போது சின்­ன­சே­லம் அருகே காரில் சென்று கொண்டிருந்­தார். அப்­போது,அவர் கார் வந்த திசையில் சாலையை கடப்­பதற்­காக இருசக்­கர வாகனம் ஒன்று குறுக்கே வந்­தது. இத­னால், இருசக்­கர வாக­னம் மீது
மோதிவி­டக் கூடாது என்­ப­தற்­காக ஜீவாகாரை திருப்பினார். அப்­போது
கட்டுப்­பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்­க­ர­மாக மோதியது.இந்த விபத்­தில் காரின்
முன்­ப­குதி முழுவதும் சேத­ம­டைந்த நிலையில்,அதிர்ஷ்­ட­வசமாக நடி­கர்
ஜீவா மற்றும் அவரது மனைவியும்
லேசானகாயங்­களு­டன் உயிர்­தப் பினர். இந்த சம்­ப­வத்­தால் அந்த பகுதியில் போக்­குவரத்து நெரிசலும்,
பர­பரப்பும் ஏற்­பட்­டது. இதையடுத்து
மாற்று கார் மூலமாக நடிகர் ஜீவா
மற்றும் அவரது மனைவி சேலத்­திற்கு சென்­றனர்.இந்த விபத்து தொடர்­பாக சம்­பவ இடத்­திற்கு
விரைந்த சின்­ன­சேலம் போலீசார் விபத்­தில் சிக்கியகாரை பறிமு­தல்
செய்து, விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகி
ன்­ற­னர்