கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி ராமன்தொட்டி
என்னுமிடத்தில் மத்திய அரசின் PMGSY என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராம பகுதிகளுக்கு சுமார் 15கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்திட அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி அடிக்கல் நாட்டுவதாக அதிமுகவினர்
பேனர் வைத்த நிலையில், அதே திட்டத்தை திமுகவினர் துவக்கி
வைத்திட கொடிகள் நாட்டினர்
திமுக ஆட்சி எனக்கூறி, கே.பி.முனுச்சாமிக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கே.பி.முனுசாமி பேரிகை-வேப்பனஹள்ளி
ராமன்தொட்டி என்னுமிடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரப்பு.திமுகவினர் அப்பகுதி
யை விட்டு செல்லாத நிலையில்
கே.பி.முனுசாமி ஒருமணிநேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினர் சென்ற பிறகே சாலை மறியலை கைவிடுவதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.. மேலும் சில இடங்களில் உள்ள பூமி பூஜை நிகழ்வுகளில்
கே.பி.முனுசாமி பங்கேற்பார் என்பதாலும் திமுகவினர் அவ்விடத்திலேயே உள்ளனர்இரண்டு மணிநேரமாக நடந்து வரும் அதிமுகவினரின் சாலை மறியலில் K.P.முனுசாமியுடன் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமாரும்
பங்கேற்ப்பு, ஊத்தங்கரை அதிமுக எம்எல்ஏ தமிழ்ச்செல்வனும் வருகை ஒசூர், உதவி காவல்
கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாக்கரே அதிமுகவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில்,
சாலை மறியல் கைவிடப்படவில்லை திமுகவினரும் சம்பவ
இடத்திலேயே இருப்பதால் பதற்றமான சூழல் நீடிக்கிறது ஸ்டாலினை
பொம்மை முதல்வர் என அதிமுகவி னர் குறிப்பிட்டு பேசியதற்கு திமுகவினர் போலிசாருடன் வாக்குவாதம்
ஒசூர் அருகே மத்திய அரசு நிதியின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைக்க வந்த கே.பி.முனுசாமிக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு திமுகவினர் தான் அடிக்கல் நாட்ட வேண்டுமென கூறி வாக்குவாதம்!






