புதுடெல்லி:
அரசு முறை பயணமாகபிரதமர் நரேந்திர மோடி புருனே, சிங்கப்பூர் ஆகியநாடுகளுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து மத்தியவெளியுறவு அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா புருனே
நாடுகளுக்கு இடையேநட்புறவு ஏற்பட்டதன்40ஆவதுஆண்டை ஒட்டி,அந்நாட்டு சுல்தான் விடுத்த அழைப்பை ஏற்று
பிரதமர் மோடி புருனே
செல்வதாக கூறப்பட்டுள்ளது. புருனேவில் சுல்தான்ஹாஜி ஹஸ்னல் போல்கியாவை சந்திக்கும் பிரதமர்மோடி, அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
மேலும் பிரதமர் மோடி அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, இந்தியா – புருனே இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர். இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா –புருனே இடையே விண்வெளித்
துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும்கையெழுத்தாக உள்ளது.புருனே நாட்டிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.புருனே பயணத்தை முடித்து விட்டு பிரதமர்மோடி சிங்கப்பூர் செல்கிறார்.
சிங்கப்பூரில் 2 நாட்கள் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போதுசிங்கப்பூரின் முக்கிய
அமைச்சர்களும் கலந்து
கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத்தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.பிரதமர் வெளியிட்ட
அறிக்கையில் புருனேதாருஸ்ஸலாமுக்கு முதன் முறையாக இருதரப்பு பயணத்தை
மேற்கொள்கிறேன். நமதுராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டுகளைக்கொண்டாடும்
வேளையில்,நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவை புதிய உயரங்களுக்கு முன்னெடுத்துச்
செல்வதற்காக மதிப்பிற்குரிய சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் அரச குடும்பத்தின் பிற மதிப்புமிக்க உறுப்பினர்களுடனான எனது சந்திப்புகளை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
புருனேயிலிருந்து செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறேன். அதிபர் தர்மன் சண்முகரத்தினம்,பிரதமர் லாரன்ஸ் வோங்,மூத்த அமைச்சர் லீசியன்லூங் மற்றும் ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் கோசோக்டோங் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பை நான்
எதிர் நோக்கியுள்ளேன்.
சிங்கப்பூரின் துடிப்பான வர்த்தக சமூகத்தின் தலைவர்களையும் நான் சந்திக்கஉள்ளேன்.
சிங்கப்பூருடனான நமது உத்திசார் கூட்டாண்மையை, குறிப்பாக மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நீடித்த
வளர்ச்சி ஆகியவற்றின் புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஆழப்படுத்து வதற்கான எனதுவிவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
நமது கிழக்கு நோக்கிய
கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இரு நாடுகளும் முக்கிய கூட்டாளிகளாக உள்ளன. எனது பயணங்
கள் புருனே, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் மண்டலத்துடனான நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நேற்று மாலை புருனே சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டின் இளவரசர் ஹாஜி அல்முஹ்ததீ
பில்லாவரவேற்று அழைத்துச் சென்றார்.
அந்நாட்டு படையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
பிரதமர் மோடி, புருனே சுல்தான் ஹஸ்னல் போல்கியாவுடன் சந்திப்பு..






