‘வாழை’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து காலை உணவுத் திட்டத்தை சுட்டிக்காட்டி மகிழ்ச்சி!

சான்ஃப்­ரான்­சிஸ்கோ:  ‘வாழை’ திரைப்­படத்தைபார்த்­துவிட்டு இயக்குநர் மாரி செல்­வ­ரா­ஜுக்கு எக்ஸ் சமூக வலை­த­ளத்­தில் வாழ்த்து தெரி­வித்­துள்ள முதல்­வர் மு.க.ஸ்டாலின், ‘முத­லமைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்’ உருவாக்கிய­தில் மகிழ்ச்சி பெற்­ற­தாகவும் குறிப்­பிட்டுள்­ளார்.இது தொடர்­பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்­கத்தில், “உண்­மைச் சம்­பவத்தின் அடிப்­ப­டை­யில் உழைக்கும் மக்­க­ளின் வாழ்வியலையும் அவர்­களின் வலி­யை­யும் பேசும்#வாழை படத்தை சான் பிரான்சிஸ்­கோ­வில் கண்டேன். படைப்­பாளி மாரிசெல்­வ­ராஜுக்கு அன்பின் வாழ்த்­துகள் பசியுடன் சிவ­ன­ணைந்­தான் தவித்­தபோது, ஆயி­ரம் வாழைத்தார்­களை நமது இத­யத்­தில் ஏற்­றி விட்­டார் மாரி!பசிக்­கொ­டு­மையை எந்தச் சிவன­ணைந்­தா­னும் எதிர்­கொள்­ளக் கூடா­தென முத­ல­மைச்­ச­ரின் காலைஉணவுத் திட்­டம் உருவாக்­கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்­கள் ஆறும் என்ற நம்பிக்­கை­யுடன்மாற்­றங்­களை நோக்கிப்பயணத்­தைத் தொடர்­வோம்!தொடர்ந்து வெற்­றிப்படங்­களை எடுத்­து வரும்மாரி செல்­வ­ராஜுக்கு மீண்டும் வாழ்த்­துகள்!” என்று பதிவிட்டுள்­ளார். இயக்குனர் மாரி செல்­வராஜ் இயக்­கத்­தில் அண்மை­யில் வெளியானது’வாழை’. இந்தபடத்­துக்கு தேனி ஈஸ்­வர் ஒளிப்­பதிவு செய்திருந்­தார். சந்­தோஷ்நாராயணன் இசை­ய­மைத்திருந்­தார். நடிகர் கலைய­ரசன், நிகிலா விமல், திவ்யாதுரை­சாமி, ‘வெயில்’ படம்மூலம் பிர­ப­ல­மான பிரி­யங்கா மற்­றும் சிலர் நடித்திருந்­த­னர். இந்­தப் படம்பலத்த வர­வேற்­பைப்பெற்ற நிலையில் ‘வாழை’திரைப்­படத்தை பார்த்­து­விட்டு இயக்குநர் மாரிசெல்­வ­ராஜுக்கு எக்ஸ் சமூக வலை­த­ளத்­தில் வாழ்த்துதெரிவித்­துள்ளார் முதல்­வர் மு.க.ஸ்டாலின்.ரூ.1300 கோடி முத­லீடு­கள் ஈர்ப்பு: தமிழ்­நாட்­டுக்கு தொழில் முத­லீடுகளை ஈர்ப்­ப­தற்­காக மாண்புமிகு தமிழ்­நாடு முத­லமைச்­சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்­கள் அமெ­ரிக்­கா­விற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகி­றார். சான்­பி­ரான்சிஸ்­கோ­வில் நடைபெற்ற முத­லீட்­டா­ளர்­க­ளுடனான சந்­திப்­பில் இது­வரை 8 நிறுவனங்­க­ளுடன் 4,600 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்கும் வகையில் 1300 கோடி ரூபாய் முத­லீட்டி­லான புரிந்­துணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டுள்ளன என்­பது குறிப்­பிடத்­தக்­கது. முன்­ன­தாக அமெ­ரிக்­கப்பயணம் பற்றி முதல்­வர் எக்ஸ் பக்­கத்­தில் பகிர்ந்த பதிவில், “அன்னை மண்ணைப் பிரிந்து அய­ல­கத்தில் இருக்கி­றேன் என்றஉணர்வே எழாத வகையில் வாஞ்­சை­யோடு என்னை அணைத்­துக்­கொள்­ளும் நம் உற­வுகள்!தங்­க­ளது உழைப்­பா­லும் அறிவாலும் வாய்ப்­பு­களை  அமைத்­துக்கொண்டு அமெ­ரிக்க நாட்­டில் உயர்ந்து கொண்­டிருக்­கும் இவர்­க­ளுக்கு அன்பும் நன்றியும்!” எனப்பதிவிட்­டிருந்­தது குறிப்­பிடத்தக்­கது.