தூத்துக்குடி மாநகரம் பிரையன்ட் நகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் காமராஜர் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். பகுதி அவைத்தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார், கூட்டத்தில் வட க்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்புரையாற்றினார். பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் அறிவுரையின்படி செயல்பட்டு 40 தொகுதிகளிலும் நாம்வெற்றி பெற்றோம். அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றவேண்டும். 200தொகுதியை இலக்காக கண்ட முதலமைச்சரின் லட்சியத்தை நிறைவேற்றி,அதனையும் கடந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். இதற்கான தேர்தல் களப்பணிகளை உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செய்ய வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வார்டு கழக பொது உறுப்பினர் கூட்டங்களை உடனடியாக நடத்துவது. 2026ம்ஆண்டு சட்டசபை தேர்தலில் முதலமைச்சரின் இலக்கான 200 தொகுதிகளில் வெற்றி பெறகழகத் தோழர்கள் முழு மூச்சுடன் தேர்தல்பணி செய்யவேண்டும்,புதிய இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கையை இல்லந்தோறும் அனைத்து வார்டுகளிலும் நடத்துவது,திமுக பவள விழாவினைமுன்னிட்டு பிரையன்ட்நகர் பகுதிக்கு உட்பட்டவார்டுகளில் கழக கொடி கம்பங்களை புதுப்பித்து புதிய கொடிகள் ஏற்றவும்,வீடுகள் தோறும் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, புதிய வாக்காளர் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்திட வேண்டும் என ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாவட்டதுணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ்.ரமேஷ், மாவட்ட ஆதி திராவிட நலவாழ்வு தலைவர் சி.பெருமாள், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கே.பிரதீப், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை,மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், சுற்றுச்சூழல்அணி மாநகர அமைப்பாளர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் அணி ரூபராஜா, வட்டச்செயலாளர்கள் செல்வராஜ் பாலசுப்பிர மணியன், சிங்கராஜ், மூக்கையா சுரேஷ்குமார், சரவணன்,நவநீதன், சுப்பையாமாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸிலின், விஜயலட்சுமி, வைதேகி, ராஜேந்திரன், சரவணகுமார், பகுதி துணை செயலாளர்கள் தங்க மாரியப்பன்,சங்கரலிங்கம், பகுதி பிரதிநிதிகள்கோபால், மயில்,அந்தோணி சுரேஷ், செல்வம், பகுதி இளைஞரணி நிர்மல், மாணவரணி பாலா,சத்யா மற்றும் வட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2026 தேர்தலில் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் சூளுரை






