புதுடெல்லி:ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, இத்திட்டத்தின்பயனாளி கள் மற்றும் இதை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திரமோடிபொறுப்பேற்ற பிறகு, குறைந்த பட்டசம் குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்குதொடங்கும் திட்டம் (பிரதமரின் ஜன்தன் யோஜனா) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகம் செய்யப் பட்டது. இதில் குறைந்த பட்ச இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை.இதன் மூலம் கடன், காப்பீடு உள்ளிட்ட வசதிகளையும் பயனாளிகள் பெறமுடியும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை யொட்டி பிரதமர் மோடிதனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:இன்று (நேற்று) நாம் ஒருமகத்தான தினத்தை கொண்டாடுகிறோம். அதுதான் ஜன் தன் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு.பயனாளிகளுக்கும் இந்த திட்டம் வெற்றி பெற பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரையும் உள்ளடக்கிய நிதிசேவையை ஊக்குவிக்கவும் கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்பு நிலை சமுதாயத்தினருக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் திட்டம் முக்கிய பங்காற்றியது. மேலும் இந்த திட்டம் அதிகாரம் மற்றும் வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகளில், அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையின் கீழ் சும ார் 80% பெண்களை கொண்டு வர ஜன் தன் திட்டம் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. குறிபபாக கடந்த 2011ல் வெறும் 26% பெண்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. இது 2021 ல் 78% ஆக அதிகரித்தது. ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 53.13 கோடி வங்கிக்கணக் குகள் தடங்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் பெயரில் உள்ள கணக்குகள் எண்ணிக்கை 30 கோடிக்கும் அதிகம். ஜன்தன் கணக்கு வைத்திருப்போரில் 35 கோடிக்கும் அதிகமானோர் ஊரகம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இப்போது நகர்ப்புற மக்களுக்கு இணைய ாக (95%) கிராமப்புற மககளிடமும (96%) வங்கிக் கணக்குகள் உள்ளன. ஜன் தன் திட்ட பயனளிகளில் இதுவரை 36.13கோடி பேருக்குஎவ்வித கட்டணமும் இல்லாமல் ரூபே டெபிட்கார்டு வழங்கள்ளப்பட்டுள்ளது. இந்த கார்டு வைத்திருப்போருக்கு ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு மற்றும் ரூ.10 ஆயிரம் வரை ஓவர்டிராப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளதுன.மேலும் ஜன் தன் திட்டம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அடித்தளமாக உள்ளது. குறிபபாக கரோனா பெருந்தொற்று கால நிதியுதவி, விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்ட நிதியுதவி,மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திடடம் ஊதியம் ஆகியவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக சலுத்தப்படுகிறது. இது தவிர ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை ெசயல்படுத்தவும் இது உதவுகிறது.ஜன் தன் வங்கிக் கணக்குகளில் ரூ.2.31 லட்சம்கோடி இருப்பு உள்ளது.இந்தக்கணக்குகளில்அதிக அளவில் இருப்பு இருக்கும் மாநிலங்களில் மது, புகைப் பழக்கம் மற்றும் குற ்ற செயல்கள் கணிசம க குறைந்திருப்பதாக கடந்த 2021 எஸ்பிஐ வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையில் சீனவையே இந்தியா மிஞ்சிவிட்டதாகவும் அதில் கூறப்பள்ளது 2011 ல் இந்திய மககளில் 35% பேர் மட்மே வங்கிக்கணக்கு வைத்திருந்தனர்.இது 2021ல் 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலக நாடுகள் பாராட்டு:அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவை வழங்குவதில் ஜன் தன் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தைஏற்படுத்தி உள்ளதாக லக ந டுகள் பாராட்டி உள்ளன.கடந்த ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஜி20 அறிக்கையில், அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவை இலக்கை வெறும் 6 ஆண்களில் இந் தியா எட்டிவிட்டடுதாக கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்த இலக்கை எடட 47 ஆண்டுகள் ஆகி இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஜன் தன் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பயனாளிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!






