தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அழகு கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது

மதுரை
10-12-2025

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் மற்றும் சுடரி நிறுவனம் இணைந்து நடத்திய அழகு கலை பயிற்சி வகுப்பு டிசம்பர் 8, 9, 10 தேதியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சிறப்பாக நடைபெற்றது… நிகழ்ச்சியில் அறந்தாங்கி யூனியன் சேர்மன் திரு சண்முகநாதன், சுடரி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் திருமதி ரேவதி அழகர்சாமி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிகழ்ச்சி அதிகாரி திரு. ஆப்ரகாம் லிங்கன் அவர்களும் கலந்துகொண்டனர்.. நிகழ்ச்சி முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் அழகிய டிராவல் பேக் வழங்கப்பட்டது.

*பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட செய்தியாளர்*