நெல்லை மாநகராட்சி வேட்பாளருக்கான மறைமுக தேர்தல்…. ராமகிருஷ்ணன் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்!

  • நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் நெல்லையில் மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது அதற்கு இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.                                                                                                    நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ள நிலையில் 16 வது வார்டு கவுன்சிலராக திமுக உறுப்பினராக உள்ள சரவணன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார், அவர் நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைவரும் தேர்வு செய்தனர், ஆனால் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்ட வந்த நிலையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராக புகார் மனுவை திமுக தலைமைக்கு அனுப்பி இருந்தனர்.                மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, நெல்லை மாநகராட்சியின் மேயர் சரவணன் திடீரென ஜூலை மூன்றாம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் கூறி இருந்தார்.  அதனால் நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே என் நேரு உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.                    மேலும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கின்ற கிட்டு அறிவிக்கப்பட்டார், இந்நிலையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அந்நிய நபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்களை தீவிர சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.                                காவல்துறை துணை ஆணையாளர் தலைமையிலான உதவி ஆணையாளர் ஆய்வாளர்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அலுவலர்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது, நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் வேட்பு மனு காலை 10.30 மணி முதல் பெறப்பட்டது.                                                                                                                         நெல்லை மாநகராட்சியில் 44 திமுக 10 திமுக கூட்டணி கவுன்சிலர்கள் என திமுக பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் நிலையில் திமுக தலைமை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கின்ற கிட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் முகாமிட்டுள்ள நிலையில் நெல்லை மாநகராட்சி ஆறாவது வார்டைச் சேர்ந்த திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் மேயருக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.


இருவர் வேட்பு மனு தாக்கல்

இரண்டு வேட்பு மனுக்கள் மாமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர், இருவரில் ஒருவர் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மற்றொருவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆறாவது மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்

மேலும் மாமன்ற மேயர் வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வழக்கம் போலவே வரும் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் கவுன்சிலர்கள் புடை சூழ வருகை தந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *