திண்டுக்கல்லில் அதிகாலை நேரத்தில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்ச தாய்!

திண்­டுக்­கல், நத்­தம்­ரோடு,குட­க­னாறு விருந்­தி­னர் இல்­லத்­தி­லி­ருந்து ரயில்வே குட்­செட் செல்­லும் வழி­யில் உள்ள  அந்தோ­ணி­யார் கோவில்வாச­லில் துணி­யில் சுற்­றப்­பட்டு பிறந்த குழந்தை இருப்பதாக அதி­காலை 3.30 மணி அள­வில் இரவு ரோந்து பணி­யில் இருந்த போலீ­சா­ருக்கு கிடைத்த தக­வலை தெடர்ந்து விரைந்து அங்கு சென்ற போலீ­சார் குழந்­தையை மீட்­ட­னர்.உட­ன­டி­யாக 108 ஆம்­பு­லன்ஸ் வர­வ­ழைக்­கப்­பட்டு குழந்தைக்கு முதல் உதவிசிகிச்சை அளித்து திண்டுக்­கல் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனையில் பிர­சவ வார்டு பிரி­வில் உள்ள ஐ.சி.யுவில்       சேர்த்து சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. அந்தகுழந்தையை வீசி­யதுயார்?,அந்த குழந்­தையின் பெற்­றோர்யார்?, தவ­றான உற­வால் பிறந்தகுழந்தை என்­ப­தால் இவ்­வாறு வீசி­னார்­களா? என்­பது குறித்துநகர் வடக்கு திண்­டுக்­கல் போலீ­சார் விசா­ரித்து வரு­கின்­றனர்.