கழிவு நீர் கலப்பதாக அவமதிப்பு வழக்கு தாக்கல்; தாமிரபரணி ஆற்றில் நீதிபதிகள் ஆய்வு

திரு­நெல்­வேலி:கழிவு நீர் கலக்­கும் விவகா­ரம் தொடர்­பாக நெல்­லை­யில் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் நேற்று தாமி­ர­பர­ணி­யில் ஆய்வு மேற்­கொண்­ட­னர்.தூத்­துக்­குடி மாவட்­டம் செய்­துங்க ­நல்­லூ ­ரைச்சேர்ந்த எழுத்­தாளர் முத்­தாலங்­கு­றிச்சி காம­ராசு என்­பவர், நீதி­மன்ற உத்­த­ரவை மீறி, தாமி­ர­ப­ரணி நதி­யில்கழி­வு­ நீர் கலப்­பதாக உயர்நீதி­மன்ற மதுரை கிளை­யில் அவம­திப்பு வழக்­குத் தொடர்ந்­தார். இதை விசா­ரித்த நீதி­ப­தி­கள் ஜி.ஆர்.சுா­மி­நாதன், புகழேந்தி அமர்வு, நதி­யில்  கழி­வு­ நீர்  கலப்­பதை தடுப்­பது தொடர்­பாக உள்­ளாட்சி அமைப்­பு­கள் எடுத்த நடவ­டிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்­யப்போவதாக தெரி­வித்­த­னர்.இதன்­படி, நெல்­லைக்கு நேற்­று ­முன்  தினம் வந்த  நீதி­ப­தி­கள் ஜி.ஆர்.சுவா­மி­நா­தன், புகழேந்தி ஆகி­யோர், சுற்­றுலா மாளி­கையில் ஆட்­சி­யர் கார்த்­தி­கே­யன், மாந­கராட்சி ஆணை­யா­ளர் சுகபுத்ரா மற்­றும் பொதுப்­பணித்­துறை, மாசுகட்­டுப்­பாட்டு வாரிய அதி­கா­ரி­கள் உள்­ளிட்டோ­ரு­டன், தாமி­ர­ப­ரணி நதி­யில் கழி­வு­நீர் கழிப்­பதை தடுக்க எடுக்­கப்­பட்ட நடவ­டிக்­கைகள் குறித்து விளக்­கம் கேட்­ட­னர்.தொடர்ந்து, மீனாட்­சி­பு­ரம்,சிந்­து­பூந்­துறை, சத்­தி­ரம் புதுக்­கு­ளம், குறுக்­குத்­துறை முரு­கன் கோயில் ஆகிய இடங்­க­ளில் ஆய்வு மேற்கொண்டு, கழி­வு­நீர் கலப்­பதை தடுப்­பதற்­கான நடவ­டிக்­கைகள் குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­டறிந்­த­னர். இந்­நி­லை­யில்,மனு­தா­ரர் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள், நீதி­ப­தி­கள் ஆய்வு நடத்­தும் நிலை­யில், தற்­காலி­கமாக அனைத்து இடங்களும்  சுத்­தம் செய்யப்­பட்­டுள்­ளன.என்று குற்­றம் சாட்­டி­னர்.இத­னால் கோபமடைந்த நீதி­ப­தி­கள்,“யாரை ஏமாற்­று­வதற்கு இது­போன்று செயல்­ப­டு­கி­றீர்கள்? முறை­யாக என்ன திட்­டம் செயல் படுத்­தப்­பட்­டுள்­ளது?”என்று கேள்வி எழுப்பி, மாந­கராட்சி அதி­கா­ரி­களை கடிந்து கொண்­ட­னர். மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் சுகபுத்ரா விளக்கம் , அளித்­தார் நீதி­பதி­க­ளி­டம் தொடர்ந்து, ராமை­யன்­பட்டி சுத்­தி­க­ரிப்பு நிலையத்­தில் நீதி­ப­தி­கள் ஆய்வு மேற் கொண்­ட­னர்.மேலும்,சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­துக்கு தண்­ணீர் வரும் பகு­தி­க­ளில் துர்­நாற்­றம் வீசு­வது குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் கேள்வி எழுப்­பி­னர். ஆய்வை முடித்து நீதி­பதி­கள் புறப்­ப­டும் போது,ராமை­யன்­பட்டி ஊராட்சி   வேளாங்­கண்ணிநகர் பகுதி மக்­கள் நீதி­ப­தி­க­ளின் வாக­னத்தை வழி­ம­றித்து,தங்­க­ளது பகு­தி­யில் செயல்­ப­டும் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தால் துர்­நாற்­றம் வீசு­வ­து­டன், பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வதாக கூறி மனு அளித்­த­னர்.இதை­ய­டுத்து “தாமி­ர­பரணி நதி­யில் கழி­வு­நீர் கலப்­பதைத் தடுக்க போர்க்­கால அடிப்­படை­யில் நடவ­டிக் கை  எடுக்க வேண்­டும்.இதை முழுமை­யாக நிறை வேற்­றத்தேவைப்­படும் ­நிதி ஒதுக்­கீடு, கால அளவு ஆகி­ய­வற்றை உள்­ளடக்­கிய வரைவு செயல் திட்­டத்தை ஒரு வாரத்­தில் சமர்ப்­பிக்க வேண்­டும்”என்று நெல்லை ஆட்­சி­ய­ருக்கு உத்­த­ர­விட்­ட­னர் . மேலும், இது தொடர்­பாக நீதி­மன்­றத்­தால் விரி­வான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டும் என­வும், தாமி­ரப­ர­ணியை பாதுகாப்­பதற்­கா­ன பணி­கள் தொடர்ந்து கண்­காணிக்­  ­கப்­ப­டும்”   என­வும் தெரி­வித்­தாா்.