மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்!

மதுரை அக்டோ­பர் 15, மதுரை திருப்­ப­ரங்­குன்றம் அருள்­மிகு சுப்­பி­ர­மணிய சுவாமி திருக்­கோவி லில் நவ­ராத்திரி விழாகடந்த 3ஆம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்­கியது. தின­மும் கோவர்த்­த­னாம்பி­கைக்கு ராஜ­ரா­ஜேஸ்­வரி அலங்­காரம், சிவபூஜை, அர்த்­த­நாரீஸ்­வ­ரர், மகி­ஷா­சுர வர்த்­தினி உள்­ளிட்ட பல்­வேறு அலங்­கா­ரங்­களில் எழுந்­தருளி பக்­தர்­களுக்கு அருள்பாலித்­தார். விழா­வின் நிறைவு நாளான சுப்­பி­ர­மணிய சுவாமி பசு­ம­லையில் அம்பு எய்­தல் நிகழ்ச்சி நடை­பெற்­றது.உற்­ச­வர் சன்­ன­தியில் இருந்து சுப்­பி­ர­மணியசுவாமி தெய்­வானை அம்­மனுக்கு பால், பன்­னீர்,இள­நீர் உள்­ளிட்ட சிறப்பு அபி­ஷே­கங்­கள் நடைபெற்று பின்­னர் சிறப்பு அலங்கா­ரத்தில் சுப்­பி­ர­மணிய சுவாமி தெய்­வா­னை­யுடன் எழுந்­த­ருளிஅலங்­கரித்து வைக்­கப்­பட்­டிருக்கும் தங்க குதிரை வாக­னத்தில் சுப்­பி­ர­மணியசுவாமி தெய்­வா­னை­யு­டன் மாலை 5 மணிக்கு திருப்­ப­ரங்­குன்­றம் கோயி­லி லிருந்து பசுமலை மண்டபத்திற்கு புறப்­பா­டா­னார். நவ­ராத்திரி பண்டிகை நிறைவு நாள் பத்­தாம் நாள் நிகழ்ச்சியாகவிஜயத­ச­மி அன்று பசும­லையில் சுப்­ர­மணியசுவாமி தெய்­வானை தங்ககுதி ரை வாக­னத்தில் எழுந்­தருளி அம்பு எய்­தல் நிகழ்ச்சி நடை­பெற்­றது. எட்டுத்திக்கும் பலிகொடுக்­கப்­பட்டு நான்கு திசை­கள் மற்றும் மேல்நோக்கி அம்பு போடப்­பட்­டது. நிகழ்ச்சி நடை­பெற்று கோவிலுக்கு வந்து தீபா­ராதனை செய்­யப்­பட்டு பக்­தர்­களுக்கு சுப்­பி­ர­மணி ய­சாமி தெய்­வானை அருள்பாலித்­தார். இதில் ஏரா­ளமான பக்­தர்­கள் கலந்துகொண்­ட­னர். விழா­விற்­கான ஏற்­பா­டு­க ளை துணை ஆணையர்/செயல் அலுவ­லர் சுரேஷ் மற்றும் திருக்­கோ­யில் அறங்­கா­வ­லர் குழு தலை­வர் சத்­ய­பிரியா,அறங்­கா­வ­லர்­கள் சண்­மு­கசுந்­த­ரம் பொம்­ம­தே­வன் மணி செல்­வம் ராமையா மற்றும் கண்­கா­ணிப்­பா­ளர் மற்றும் பசுமலை மண்­டபபொறுப்­பா­ளர் அழகு கோயில் அலுவ­லர்­கள் சிறப்­பாக செய்திருந்­த­னர்.